இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர்கள் பலர் கிரிக்கெட் அகடாமி நடத்தி வருகிறார்கள்.அவைகளில் அதிரடி தொடக்க ஆட்டக்காரர் ஷேவாக், சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன்சிங், மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் யுவராஜ்சிங் ஆகியோர் தனித்தனியாக கிரிக்கெட் அகாடமிகளை நடத்தி வருகிறார்கள். அந்த வரிசையில் இந்திய முன்னாள் கேப்டன் டோனியும் இப்போது சேர்ந்துள்ளார். இந்த கிரிக்கெட் அகாடமியை டோனி வெளிநாட்டில் தொடங்கியுள்ளார்.
கடந்த நவம்பர் மாதத்தில் துபாயைச் சேர்ந்த பசிபிக் ஸ்போர்ட்ஸ் கிளப் மற்றும் இந்தியாவை சேர்ந்த ஆக்ரா ஸ்போர்ட்ஸ் கிளப்புடன் இணைந்து துபாயில் மகேந்திர சிங் டோனி கிரிக்கெட் அகாடமி தொடங்கினார். அந்த கிரிக்கெட் அகாடமிக்கு எம்.எஸ்.டோனி கிரிக்கெட் அகாடமி என பெயரிடப்பட்டது.
படிப்படியாக அவரது கிரிக்கெட் அகாடமியை ஐக்கிய அரபு அமீரகத்தின் பல்வேறு பகுதிகள் மற்றும் தென்ஆப்பிரிக்கா, இங்கிலாந்து ஆகிய நாடுகளிலும் தொடங்க திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில், சிங்கப்பூரில் உள்ள செயின்ட் பாட்ரிக் பள்ளியில் புதிய கிரிக்கெட் அகாடமியை இந்திய முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் டோனி தொடங்கியுள்ளார்.
இந்த பயிற்சி மையத்தின் தொடக்கவிழா நேற்று சிங்கப்பூரில் நடைபெற்றது. இதில் டோனி கலந்துகொண்டு ரிப்பன் வெட்டி பயிற்சி மையத்தை தொடங்கி வைத்தார். இந்த பயிற்சி மையத்தில் ஆறு வயதுக்கு மேற்பட்ட சிறுவர்கள் சேர அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
Mutton pickle-மட்டன் ஊறுகாய் செய்வது எப்படி என இப்பதிவில் தெரிந்து கொள்வோம் . தேவையான பொருட்கள் : மட்டன் =1/2 கிலோ மஞ்சள் தூள் =1 ஸ்பூன்…
8 வடிவ நடை பயிற்சி-எட்டு வடிவ நடை பயிற்சி செய்யும் முறை அதன் பயன்கள்,தவிர்க்க வேண்டியவர்கள் பற்றி இப்பதிவில் காணலாம். 8 வடிவ நடை பயிற்சி செய்யும்…
Heat Wave : வழக்கத்தை விட இந்தாண்டு வெப்பநிலை அதிகரிக்க 2 காரணங்களை இந்திய வானிலை ஆய்வு மைய ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். வழக்கத்தை விட இந்தாண்டு வெயிலின்…
Mumbai Indians : ஐபிஎல் தொடரில் நட்சித்திர அணியான மும்பை இந்தியன்ஸ் 7 தோல்விகளுக்கு பிறகும் ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெரும் வாய்ப்புகளை பற்றி பார்ப்போம்.…
Virudhunagar: விருதுநகர் மாவட்டத்தில் கல்குவாரி ஒன்றில் ஏற்பட்ட வெடி விபத்தில் இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளனர். விருதுநகர் அருகே ஆவியூரில் உரிமம் பெற்ற கல் குவாரியும், வெடி…
Watermelon seeds-தர்பூசணி விதைகளின் ஆரோக்கிய நன்மைகளை இப்பதிவில் தெரிந்து கொள்வோம். தர்பூசணியை சாப்பிட்டுவிட்டு அதன் விதைகளை தூக்கி எரிந்து விடுவோம். ஆனால் அந்த விதைகள் நம்மில் பலரும்…