ஜாக்டோ ஜியோ அமைப்பினரின் கோரிக்கையை நிறைவேற்ற ஆசையாக இருக்கிறது!ஆனால் எங்களிடம் பணமில்லை! மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார்

மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் ,ஜாக்டோ ஜியோ அமைப்பினரின் கோரிக்கையை நிறைவேற்ற மனமிருக்கிறது ஆனால் பணமில்லை என்று கூறியுள்ளார்.

சென்னை எண்ணூரில் தீ விபத்தில் எரிந்து நாசமான குடிசைகளை அவர் பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், தாமரை இல்லாமல் இலை இல்லை என்றும் இலை தள்ளாடி கொண்டிருப்பதாக கூறுபவர்கள் கற்பனை உலகத்தில் இருப்பதாக விமர்சித்தார். மக்கள் மனதில் தாமரைக்கோ, சூரியனுக்கோ அல்லது புதிய கட்சிகளுக்கோ ஒருபோதும் இடமிருக்காது என்றும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment