இன்றைய காலகட்டத்தில் அதிகமானோர் பாதிக்கப்படும் நோய்களில் ஒன்று சர்க்கரை நோய். இந்த நோய் பரம்பரையாக வரும் நோய்களில் ஒன்றாக உள்ளது. இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இன்று அதிகமாகி கொண்டே இருக்கிறது.
இந்த நோய் வருவதற்கு முதல் முக்கிய காரணம் நமது உணவு முறைகள் தான். மைதாவினால் செய்யப்பட்ட உணவுகளை நாம் விரும்பி உண்பதால் தான் இந்த நோய் வருவதற்கு முக்கிய காரணமாக அமைகிறது.
மைதா சேர்த்த உணவுகளுக்கு கிளைசெமிக் அளவீடு அதிகமாக இருக்கும். மைதாவினால் செய்யப்பட்ட உணவுகளை சாப்பிட்டவுடன் விரைவில் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிக்கும்.
இன்று அதிகமானோர் அவதிப்படும் சர்க்கரை நோய் மற்றும் உடல் பருமனுக்கு முக்கிய காரணமாக மைதாவினால் செய்யப்பட்ட இந்த உணவுகள் உள்ளது. இந்த உணவுகளில் சத்துக்களே இராது.
மைதாவினால் செய்யப்படும் உணவுகள் வெறும் கலோரிகளை கொண்டு செய்யப்படும் உணவுகள். இந்த உணவுகளுக்கு சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் அடிமைகளாகி விடுகின்றனர்.
சிறு வயதிலேயே மைதாவினால் செய்யப்பட்ட உணவுகளை விரும்பி சாப்பிடுவதனால், பெரியவர்கள் ஆகும் போது, அதற்கு அடிமைகளாகி விடுகின்றனர். இப்படிப்பட்டவர்களுக்கு இளம் வயதிலேயே வயதுக்கு மீறிய உடல் பருமன் அதிகரித்து விடுகிறது.
மைதாவினால் செய்யப்பட்ட உணவுகளை விரும்பி சாப்பிடும் போது, இந்த உணவுகள் உடலில் கெட்ட கொழுப்புகளை அதிகரிக்க செய்கிறது. மேலும், இதனால், இதய நோய் ஏற்படுவதற்கான அபாயமும் ஏற்படுகிறது.
உடலுக்கு தேவையான நார்சத்து மைதாவில் இல்லாமல் இருப்பது , உடல் ஆரோக்கியத்துக்கு பல உடல்நலக் கேடுகளை ஏற்படுத்துகிறது.
சர்க்கரை நோய் உள்ளவர்கள் முக்கியமாக மைதாவினால் செய்யப்பட்ட உணவுகளை தவிர்க்க வேண்டும். மைதாவினால் செய்யப்பட்ட உணவுகளை சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது.
மைதாவினால் செய்யப்பட்ட உணவுகளை சாப்பிடும் போது, கணையத்தில் இன்சுலின் சுரப்பது தடை செய்யப்படுகிறது. இதனால் நீரிழிவு நோய் வருவதற்கு அதிகமான வாய்ப்பு உள்ளது.
மைதா உணவினால் இளம் வயதிலேயே, இதயத்திற்கு செல்லும் இரத்த நாளங்களில் கொழுப்பு படித்தால், உடல் பருமன், உயர் இரத்த அழுத்தம், சர்க்கரை நோய் மற்றும் மாரடைப்பு நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. .
IPL2024: பஞ்சாப் அணி 17.5 ஓவரில் 3 விக்கெட்டை இழந்து 163 ரன்கள் எடுத்து 7 விக்கெட்டை வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில் சென்னை அணியும்,…
Mutton pickle-மட்டன் ஊறுகாய் செய்வது எப்படி என இப்பதிவில் தெரிந்து கொள்வோம் . தேவையான பொருட்கள் : மட்டன் =1/2 கிலோ மஞ்சள் தூள் =1 ஸ்பூன்…
8 வடிவ நடை பயிற்சி-எட்டு வடிவ நடை பயிற்சி செய்யும் முறை அதன் பயன்கள்,தவிர்க்க வேண்டியவர்கள் பற்றி இப்பதிவில் காணலாம். 8 வடிவ நடை பயிற்சி செய்யும்…
Heat Wave : வழக்கத்தை விட இந்தாண்டு வெப்பநிலை அதிகரிக்க 2 காரணங்களை இந்திய வானிலை ஆய்வு மைய ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். வழக்கத்தை விட இந்தாண்டு வெயிலின்…
Mumbai Indians : ஐபிஎல் தொடரில் நட்சித்திர அணியான மும்பை இந்தியன்ஸ் 7 தோல்விகளுக்கு பிறகும் ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெரும் வாய்ப்புகளை பற்றி பார்ப்போம்.…
Virudhunagar: விருதுநகர் மாவட்டத்தில் கல்குவாரி ஒன்றில் ஏற்பட்ட வெடி விபத்தில் இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளனர். விருதுநகர் அருகே ஆவியூரில் உரிமம் பெற்ற கல் குவாரியும், வெடி…