கொடூரமாக காஷ்மீரில் 8 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட வழக்கு!ஐ.நா. பொதுச் செயலாளர் அந்தோனியோ குட்டரெஸ்  கடும் தாக்கு !

ஐ.நா. பொதுச் செயலாளர் அந்தோனியோ குட்டரெஸ் காஷ்மீரில் 8 வயது சிறுமி கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட வழக்கில், குற்றவாளிகள் தண்டிக்கப்படுவர் என நம்புவதாக,  கூறியுள்ளார்.

ஜம்மு காஷ்மீரின் கத்துவா மாவட்டத்தில் 8 வயது சிறுமி கொடூரமான முறையில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு, கொலை செய்யப்பட்டார். இந்த விவகாரம் நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், 8 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, கொல்லப்பட்டது மிகவும் கொடூரமானது என ஐ.நா. பொதுச் செயலாளர் அந்தோனியோ குட்டரெஸ் கூறியுள்ளார். இந்த கொடூரமான நிகழ்வு, ஊடகங்கள் மூலம் தெரியவந்ததாக கூறியுள்ள அவர், இந்த குற்றத்தில் தொடர்புடையவர்களுக்கு உரிய தண்டனை கிடைக்க, சம்பந்தப்பட்ட இந்திய அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்கள் என்றும் நம்புவதாகவும் தெரிவித்துள்ளார். 8 வயது சிறுமியின் கொடூர கொலைக்கு உரிய நீதியும், குற்றவாளிகளுக்கு கடும் தண்டனையும் கிடைக்க வேண்டும் என்றும் அந்தோனியோ குட்டரெஸ் வலியுறுத்தியுள்ளார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment