Categories: சினிமா

"காரில் கடத்தி நடிகை பாலியல்"மோகன்லால் மீது நம்பிக்கை இல்லை நடிகைகள் கருத்து..!!

மலையாள நடிகர் சங்கத்தில் இருந்து திலீப்பை நீக்க மோகன்லால் மறுப்பு தெரிவித்துள்ளார்.
கேரளாவில் பிரபல நடிகையை காரில் கடத்தி பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கைதான திலீப்பை மலையாள நடிகர் சங்கத்தில் இருந்து நீக்கினர். ஆனால் சங்கத்துக்கு புதிய தலைவராக பொறுப்பு ஏற்ற மோகன்லால் பொதுக்குழுவை கூட்டி திலீப்பை மீண்டும் சங்கத்தில் சேர்த்துவிட்டார்.
இது மலையாள நடிகைகள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. ரேவதி, பத்மபிரியா, ரீமா கல்லிங்கல் உள்ளிட்டோர் மோகன்லால் முடிவை எதிர்த்தனர். சில நடிகைகள் மலையாள நடிகர் சங்கத்தில் இருந்தும் விலகினார்கள். இந்த நிலையில் நிரபராதி என்று நிரூபித்துவிட்டு சங்கத்தில் இணைகிறேன் என்று திலீப் அறிவித்தார்.
ஆனாலும் திலீப்பை அதிகாரப்பூர்வமாக சங்கத்தில் இருந்து நீக்கவில்லை. நடிகர் சங்கத்தில் திலீப் இருக்கிறாரா? இல்லையா? என்று விளக்கும்படி மோகன்லாலுக்கு நடிகைகள் கடிதம் அனுப்பினர். திலீப் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு விட்டதால் அவரை சங்கத்தில் இருந்து நிரந்தரமாக நீக்க வேண்டும் என்றும் வற்புறுத்தினர்.
ஆனாலும் நடிகர் சங்கம் மவுனமாக இருந்தது. இதைத்தொடர்ந்து நடிகைகள் அஞ்சலி மேனன், ரீமா கல்லிங்கல், பார்வதி, ரம்யா நம்பீசன், ரேவதி ஆகியோர் 2 நாட்களுக்கு முன்பு கொச்சியில் கூடி மோகன்லால் மீது நம்பிக்கை போய்விட்டது. தீலிப்பை காப்பாற்றி சங்கத்தில் வைத்திருக்க முயற்சிக்கிறார் என்று குற்றம் சாட்டினார்கள்.
அவர்களுக்கு பதில் அளித்து மோகன்லால் சார்பில் மலையாள நடிகர் சங்க செயலாளர் ஜெகதீஷ் கூறும்போது, “நீதிமன்ற தீர்ப்பு வரும்வரை திலீப்பை சங்கத்தில் இருந்து நீக்க வேண்டாம் என்று சங்கத்தில் உள்ள பெரும்பான்மையினர் கருத்து தெரிவித்து உள்ளனர்” என்று தெரிவித்தார். இது நடிகைகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆலோசித்து வருகிறார்கள்.
DINASUVADU 

Dinasuvadu desk

Recent Posts

உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் முதல் முறையாக துபே, சாம்சன்!

T20 World Cup 2024: டி20 உலக கோப்பை தொடருக்காக ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்தது. ஐபிஎல் தொடர் முடிந்த உடனே டி20 உலகக்கோப்பை…

6 mins ago

பரவும் பறவை காய்ச்சல்… கண்காணிக்கும் மத்திய சுகாதாரத்துறை.!

Bird Flu : இந்தியாவில் பரவும் பறவை காய்ச்சல் தொடர்பாக இந்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளது. நமது நாட்டில் மட்டும்மல்லாது உலகில் ஒரு சில நாடுகளில்…

25 mins ago

நிர்மலா தேவிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிப்பு!

Nirmala Devi: கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்த முயன்ற வழக்கில் நிர்மலா தேவிக்க்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. கடந்த 2018ம் ஆண்டு விருதுநகர் மாவட்டம்…

36 mins ago

விடுமுறையில் செம கலெக்ஷன்! வசூலில் மிரட்டி விட்ட ரத்னம்!

Rathnam : விஷால் நடிப்பில் வெளியான ரத்னம் திரைப்படம் உலகம் முழுவதும் 11 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இயக்குனர் ஹரி இயக்கத்தில் விஷால்  நடிப்பில்…

1 hour ago

‘கோட்’ படத்தில் சிஎஸ்கே வீரர்கள்? உண்மையை உடைத்த அஜ்மல் !!

Ajmal Ameer : விஜய் நடித்து கொண்டிருக்கும் 'தி கோட்' படத்தில் சிஎஸ்கே வீரர்கள் நடித்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. நடிகர் விஜய் நடித்து வரும் படமான 'தி கோட்'…

1 hour ago

மணிப்பூர் பெண்களுக்கு நேர்ந்த கொடூரம்… CBI அறிக்கையில் திடுக்கிடும் தகவல்கள்…

Manipur Violence : மணிப்பூரில் ஒரு கும்பலால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட இரு பெண்கள் குறித்தும், அங்கு நேர்ந்த சம்பவங்கள் குறித்தும் CBI அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த…

2 hours ago