இலங்கை அணிக்கு 462 ரன்கள் இலக்கு….

இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணிக்கு வெற்றி இலக்காக 462 ரன்கள் நிர்ணயிக்கப்பட்டது.

இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணிக்கு வெற்றி இலக்காக 462 ரன்கள் நிர்ணயிக்கப்பட்டது.

முதலாவது டெஸ்ட்

இலங்கை–இங்கிலாந்து அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் போட்டி தொடரில் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இலங்கையில் உள்ள காலே மைதானத்தில் நடந்து வருகிறது. இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 342 ரன்கள் சேர்த்து ஆட்டம் இழந்தது. அதிகபட்சமாக பென் போக்ஸ் 107 ரன்கள் எடுத்தார். இலங்கை அணி முதல் இன்னிங்சில் 203 ரன்னில் ‘ஆல்–அவுட்’ ஆனது.

139 ரன்கள் முன்னிலையுடன் 2–வது இன்னிங்சை ஆடிய இங்கிலாந்து அணி 2–வது நாள் ஆட்டம் முடிவில் 12 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 38 ரன்கள் எடுத்து இருந்தது. ரோரி பர்ன்ஸ் 11 ரன்னுடனும், ஜென்னிங்ஸ் 26 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

இலங்கை அணிக்கு 462 ரன்கள் இலக்கு

நேற்று 3–வது நாள் ஆட்டம் நடந்தது. தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து அணி தேனீர் இடைவேளைக்கு பிறகு 2–வது இன்னிங்சில் 93 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 322 ரன்கள் சேர்த்து டிக்ளேர் செய்தது. 2–வது சதம் கண்ட தொடக்க ஆட்டக்காரர் ஜென்னிங்ஸ் 280 பந்துகளில் 9 பவுண்டரியுடன் 146 ரன்கள் குவித்து ஆட்டம் இழக்காமல் இருந்தார். இலங்கை அணி தரப்பில் தில்ருவன் பெரேரா, ரங்கனா ஹெராத் தலா 2 விக்கெட் கைப்பற்றினார்கள். இந்த போட்டியுடன் கிரிக்கெட்டில் இருந்து விடைபெறும் 40 வயதான இடக்கை சுழற்பந்து வீச்சாளர் ரங்கனா ஹெராத் 93 டெஸ்ட் போட்டியில் மொத்தம் 433 விக்கெட்டுகள் வீழ்த்தி உள்ளார். டெஸ்ட் போட்டியில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய இடக்கை பவுலர் என்ற பெருமையுடன் ரங்கனா ஹெராத் ஓய்வு பெறுகிறார்.

பின்னர் 462 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் 2–வது இன்னிங்சை தொடங்கிய இலங்கை அணி நேற்றைய ஆட்ட நேரம் முடிவில் 7 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 15 ரன்கள் எடுத்தது. தொடக்க ஆட்டக்காரர்கள் கருணாரத்னே 7 ரன்னுடனும், குஷால் சில்வா 8 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். இன்று 4–வது நாள் ஆட்டம் நடக்கிறது. காலே மைதானத்தில் இங்கிலாந்து அணி இதுவரை 4 டெஸ்ட் போட்டியில் விளையாடி இருக்கிறது. இதில் 2 ஆட்டத்தில் தோல்வியும், 2 ஆட்டத்தில் டிராவும் கண்டுள்ளது. இந்த மைதானத்தில் முதல் முறையாக இங்கிலாந்து அணி வெற்றி பெற பிரகாசமான வாய்ப்பு உருவாகி உள்ளது.

dinasuvadu.com

Dinasuvadu desk

Recent Posts

IPL2024: எளிதான இலக்கு…சென்னை வீழ்த்தி 7 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் வெற்றி..!

IPL2024: பஞ்சாப் அணி 17.5 ஓவரில் 3 விக்கெட்டை இழந்து 163 ரன்கள் எடுத்து 7 விக்கெட்டை வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில் சென்னை அணியும்,…

5 hours ago

மட்டன் ஊறுகாய் செய்வது எப்படி ?வாங்க தெரிஞ்சுக்கலாம் .!

Mutton pickle-மட்டன் ஊறுகாய் செய்வது எப்படி என இப்பதிவில் தெரிந்து கொள்வோம் . தேவையான பொருட்கள் : மட்டன் =1/2 கிலோ மஞ்சள் தூள் =1 ஸ்பூன்…

11 hours ago

நீங்கள் எட்டு வடிவ நடை பயிற்சி செய்பவரா? இதெல்லாம் அவசியம் தெரிஞ்சுக்கோங்க.!

8 வடிவ நடை பயிற்சி-எட்டு வடிவ நடை பயிற்சி செய்யும் முறை அதன் பயன்கள்,தவிர்க்க வேண்டியவர்கள் பற்றி இப்பதிவில் காணலாம். 8 வடிவ நடை பயிற்சி செய்யும்…

12 hours ago

சுட்டெரிக்கும் வெப்பநிலை… அதிகரிக்கும் வெப்ப அலை… காரணம் என்ன.?

Heat Wave : வழக்கத்தை விட இந்தாண்டு வெப்பநிலை அதிகரிக்க 2 காரணங்களை இந்திய வானிலை ஆய்வு மைய ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். வழக்கத்தை விட இந்தாண்டு வெயிலின்…

13 hours ago

என்னங்க சொல்லறீங்க? இது மட்டும் நடந்தா மும்பை ப்ளே ஆஃப் செல்லுமா?

Mumbai Indians : ஐபிஎல் தொடரில் நட்சித்திர அணியான மும்பை இந்தியன்ஸ் 7 தோல்விகளுக்கு பிறகும் ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெரும் வாய்ப்புகளை பற்றி பார்ப்போம்.…

14 hours ago

திடீரென பயங்கரமாக வெடித்து சிதறிய கல்குவாரி …விபத்து நடந்தது எப்படி.?

Virudhunagar: விருதுநகர் மாவட்டத்தில் கல்குவாரி ஒன்றில் ஏற்பட்ட வெடி விபத்தில் இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளனர். விருதுநகர் அருகே ஆவியூரில் உரிமம் பெற்ற கல் குவாரியும், வெடி…

14 hours ago