மீண்டும் தடை செய்யப்படுகிறதா டிக்டாக்..?

இந்தியாவில், சிறுவர்கள் மற்றும் பெரியவர் வரை அனைவரும் பயன்படுத்தும் செயலி, டிக் டாக். சைனாவின் விட்டான் என்ற நிறுவனத்தினால் வடிவமைக்கப்பட்ட இந்த செயலி, உலகம் முழுவதும் அனைவராலும் உபயோகிக்கப்படுகிறது.

இந்த செயலியின் மூலம், மக்கள் தங்களது தனிப்பட்ட திறமையான நடிப்பு, நடனம், போன்றவற்றை வெளிகாட்டுகின்றனர். குறிப்பாக இந்தியாவில் 200 மில்லியன் பயனர்கள் இந்த செயலியை பயன்படுத்தி வருகின்றனர்.

கலாச்சார சீரழிவை இந்த செயலி மூலம் ஏற்படுத்துவதாக கூறி, இந்த ஆண்டு தொடக்கத்தில் இந்த செயலிக்கு உயர்நீதிமன்ற  மதுரை கிளை  தடை விதித்தது. தற்பொழுது அரசியல் கட்சிகள் இந்த செயலியை பயன்படுத்தி தங்களது பிரச்சாரங்களை தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகின.

ஏற்கனவே கலாச்சார சீரழிவு காரணமாக இந்த செயலிக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை  தடை விதித்தது. தற்பொழுது இவர்களும் அரசியல் சார்ந்த வீடியோக்களை பதிவேற்றம் நீதிமன்றங்கள் தடை விதிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், ஃபேஸ்புக் ட்விட்டர் போன்ற சமூக வலைத்தளங்களில் அரசியல் சார்ந்த விளம்பரங்களை தடை செய்துள்ளது, குறிப்பிடத்தக்கது.