கல்லாப்பெட்டியில் கை வைக்காமல்..வெங்கயத்தின் மீது கை வைத்த நபருக்கு அடி உதை..!!

*ஒரு கிலோ வெங்காயம் 100 ரூபாய்க்கு மேல் அதாவது கிட்டத்தட்ட 120 ரூபாய் சில இடங்களில் 200 ரூபாய் கூட வெங்காயம் விற்பனை ஆகிறது.

*புதுச்சேரியிலுள்ள சந்தையில் வெங்காய திருடிய நபரை அடித்து உதைத்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்

தற்போது நாடு முழுவதும் வெங்காயத்தின் விலை கடுமையாக ஏற்றம் கண்டுள்ளது. ஒரு கிலோ வெங்காயம் 100 ரூபாய்க்கு மேல் அதாவது கிட்டத்தட்ட 120 ரூபாய் சில இடங்களில் 200 ரூபாய் கூட வெங்காயம் விற்பனை ஆகிறது. அந்த அளவிற்கு வெங்காயம் விலை ஏற்றம் கண்டுள்ளது.மேலும் இங்கு வேர் அழுகல் நோயினால் அந்த சின்ன வெங்காயம் விளைச்சல் பாதிக்கப்படுவதாலும் தமிழகத்தில் கடுமையான விலை ஏற்றம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் புதுச்சேரில் உள்ள மார்க்கெட்டில் வெங்காய திருடிய நபரை அடித்து உதைத்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். குபேர் மார்க்கெட் என்ற பகுதியில் இரவு நேரத்தில் வெங்காயம் உள்ளிட்ட பொருட்களை மூட்டைகளை அடுக்கி வைத்துள்ளனர்.

இந்த மூட்டைகளை திருட்டு போனதால் திருடனை பிடிக்க வியாபாரிகள் ரகசியமாக கண்காணித்து காத்திருந்த நிலையில் மார்க்கெட்டில் அடுக்கி வைத்திருந்த வெங்காய மூட்டைகளில் ஒரு மூட்டையை கடத்தினார். கடத்திய நபரை கையும் களவுமாக பிடித்தனர். அப்போது அவரிடம் கேட்டபோது அடிக்கடி இது போன்ற திருட்டுக்களை செய்து வருவதை ஒத்துகொண்டார்.

இதை கேட்ட கோபமடைந்த வியாபாரிகள்அந்த நபரை கட்டிவைத்து அடித்துள்ளார்கள். பின்னர் பெரிய மார்க்கெட் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.இதை தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

 

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.