அசாம் போலீஸ் ஆட்சேர்ப்பு தேர்வு குறித்து முதல்வர் சர்பானந்தா சோனோவால் விளக்கம்.!

அசாம் போலீஸ் ஆட்சேர்ப்பு தேர்வை முதல்வர் சர்பானந்தா சோனோவால் ஒரு மாதத்தில் தேர்வு நடத்த உத்தரவிடுகிறார்.

செப்டம்பர்-20 ஆம் தேதி நடத்த திட்டமிடப்பட்ட துணை ஆய்வாளர்கள் ஆட்சேர்ப்பு தேர்வு வினாத்தாள் கசிந்ததால் சில நிமிடங்களில் தேர்வு ரத்து செய்யப்பட்டது. வினாத்தாள் கசிந்ததால் இரண்டு நாட்களுக்கு முன்பு ரத்து செய்யப்பட்டு துணை ஆய்வாளர்கள் பதவிகளுக்கான ஆட்சேர்ப்பு தேர்வு ஒரு மாதத்திற்குள் நடத்தப்படும் என்று அசாம் முதல்வர் சர்பானந்தா சோனோவால் அறிவித்துள்ளார்.

முதலமைச்சர், போலீஸ் ஆட்சேர்ப்பு வாரியத் தலைவர் பிரதீப் குமாருக்கு தேர்வை வெளிப்படையாக நடத்தவும், முடிவுகளை விரைவாக அறிவிக்கவும் உத்தரவிட்டார் என்று அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.