தமிழகத்தில் டீ கடைகள்,காய்கறிக்கடைகள்,உணவகங்கள் செய்லபட அனுமதி.
மத்திய அரசு நேற்று வெளியிட்ட விதிமுறைகளின் படி, சில தளர்வுகளுடன் தமிழக அரசு, தமிழகத்தில் ஜூன் 30 வரையில் ஊரடங்கை நீட்டித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழகத்தில் ஜூன் 1 முதல் 7ஆம் தேதி வரை உணவகங்கள் காலை 6 மணி முதல் 8 மணி வரை இயங்க அனுமதி அளித்துள்ளது. மேலும் ஜூன் 8 முதல் டீ கடைகள், உணவகங்களில் 50% இருக்கைகளுடன் செயல்பட அனுமதி அளித்துள்ளது. இதற்கு முன்னர் உணவு மற்றும் டீ கடைகளில் பார்சலுக்கு மற்றுமே அனுமதி அளித்தது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் காய்கறிக்கடைகள் காலை 6 முதல் 8 மணி வரை இயங்க அனுமதி. மேலும் முக்கியமாக வணிக வளாகங்கள், தங்கும் விடுதிகள் ஆகியவற்றை திறக்க தடை நீட்டிப்பு.