தன்னை அவமதிப்பவர்களுக்கு சமந்தாவின் பதில் என்ன தெரியுமா.!

சமந்தா ரசிகர்களிடம் பேசுகையில் உங்களை வெறுப்பவர்களுக்கு பதில் என்ன என்று கேட்க, தன்னை அவமதிப்பவர்களுக்கு முன்னால் சிறப்பாக செயல்பட வேண்டும் என்றார்.

தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. இவர் நாகார்ஜுனின் மகனான நாக சைதன்யாவை திருமணம் செய்து கொண்டார். தற்போது பல படங்களை தனது கைவசம் வைத்துள்ள சமந்தாவை சமீபத்தில் பூஜா ஹெக்டே சீண்டியதாக சில தகவல்கள் வெளியாகியிருந்தது. பூஜா ஹெக்டே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சமந்தாவின் புகைப்படத்தை வெளியிட்டு இவர் அவ்வளவு அழகாக தெரியவில்லையே என்று பதிவிட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ரசிகர்கள் பலர் பூஜா ஹெக்டே சமந்தாவிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் கூறி வந்தனர்.

தற்போது ஊரடங்கு காரணமாக பல பிரபலங்கள் ரசிகர்களிடம் உரையாடல் நடத்தி வருகின்றனர். அந்த வகையில் சமந்தா தனது டுவிட்டர் பக்கத்தில் ரசிகர்களிடம் பேசுகையில், ரசிகர் ஒருவர் உங்களை வெறுப்பவர்களுக்கு உங்களது பதில் என்ன என்று கேள்வி கேட்க, அதற்கு சமந்தா துரதிர்ஷ்டவசமாக நீங்கள் என்னை ஊக்கப்படுத்துகிறீர்கள் என்பதை நீங்கள் உணரவில்லை. பாராட்டுக்கள் என்னை சோம்பேறியாக ஆக்குகிறது, அவமதிப்புகள் எனது சிறந்த படைப்பை கொடுக்க என்னை தூண்டுகிறது, எனவே நன்றி என்று கூறியுள்ளார்.