தமிழகம் முழுவதும் போலியோ சொட்டு மருந்து முகாம் தொடங்கியது.. தமிழக முதல்வர் சென்னையில் தொடங்கி வைப்பு..

  • இன்று தமிழகம் முழுவதும் போலியோ சொட்டுமருந்து முகாம்.
  • தமிழக முதல்வர் துவக்கிவைப்பு.

தமிழகம் முழுவதும் இன்று  போலியோ முகாம்கள் மூலம் தமிழகம் முழுவதும் மொத்தம் 72 லட்சம் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டிருக்கிறது . இதற்காக பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்க்களான  பேருந்து நிலையம், ரயில் நிலையம், அங்கன்வாடி மையம், துனை சுகாதார மையம், பள்ளிகளில், அரசு மருத்துமனை என  50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலியோ முகாம்களையும், தமிழகம் முழுவதும் சொட்டு மருந்து வழங்கும் பணியில் சுமார் 2 லட்சம் அரசு அலுவலர்களையும்  சுகாதாரத்துறை ஈடுபடுத்தியுள்ளது. இந்த  போலியோ சொட்டு மருந்து முகாம் இன்று காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த போலியோ சொட்டு மருந்து முகாமை  தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் சென்னை பசுமை வழி சாலையில் உள்ள அவரது இல்லத்தில் துவக்கி வைத்தார். அங்கு அமைக்கப்பட்டிருந்த  போலியோ தடுப்பு சொட்டு மருந்து முகாமில் ஒரு குழந்தைக்கு சொட்டு மருந்து வழங்கி இந்நிகழ்வினை தொடங்கி வைத்தார்.

author avatar
Kaliraj