தேர்வு எழுத வந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த இளைஞர்..!

24 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவர், மேல்படிப்பிற்கான தேர்வுகளை எழுத செப்டம்பர் மாதம் 22ஆம் தேதி தனது சொந்த ஊரிலிருந்து வந்துள்ளார். தேர்வு மையத்தில் வைத்து அந்தப் பெண்ணை சந்தித்த அவரது உறவினர் ஒருவர், அருகில் உள்ள ஓட்டலில் தங்கி பொறுமையாக ஊருக்கு செல்லலாம் என கூறியுள்ளார். அதற்கு அந்தப் பெண் மறுப்பு தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து அந்தப் பெண்ணிடம் வற்புறுத்திக் கேட்டார், அந்த இளைஞர். வற்புறுத்திக் கேட்டதால் ஒப்புக் கொண்ட அந்த பெண் அந்த இளைஞருடன் ஹோட்டல் அறைக்கு சென்றார். இருவரும் ஒரே அறையில் தங்கி இருந்ததால் அவர் அந்த பெண்ணை பாலியல் வன்முறை செய்துள்ளார்.
இது குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கை குருகிராம் பகுதியில் உள்ள மகளிர் காவல்நிலையத்திற்கு மாற்றம் செய்யப்பட்டது. புகார் குறித்து விசாரணை தொடங்கி உள்ளது. தர் கட்டமாக அந்தப் பெண்ணின் வாக்குமூலத்தை பதிவு செய்து விசாரணையை நடத்தி வருகின்றனர். மேலும் தப்பி ஓடிய அந்த நபரை காவல்துறையினர் தேடி வருகிறது.