தலை வாசபடியில் தலை வைத்து படுக்கக்கூடாது ஏன் தெரியுமா?

நாம் குடியிருக்கும் வீட்டிற்கு தலைவாசல் முக்கியமானது. வீட்டிற்குள் வருபவர்களை வரவேற்கவு காலில் உள்ள தூசிகளை துடைத்து விட்டு வரவும் மிதியடிகளை இருக்கும் அந்த மிதியடி சிவப்பு நிறமானதாக இருந்தால் அது சிறப்பானது.

ஒரு வீட்டிற்கு தலை வாசல் என்பது மிக முக்கியமாகும். என்னதான் பெரிய வீட்டை கட்டினாலும் வீட்டிற்கு வாசல் என்பது முறையாக அமையவில்லை என்றால் அவ்வீட்டில் லட்சுமி குடியிறுக்கமாட்டாள். வாசற்படியில் ஆணிகளை அடிக்காமல் சுவரில் அடிப்பது நல்லது. மாதத்தில் ஒருமுறையாவது 11 இலைகளை கொண்டு மாவிலை தோரணம் கட்டவேண்டும்.

நம் வீட்டு வாசல்படியில் நாம் சில விஷயங்களை செய்யக்கூடாது. நில வாசற்படியில் நின்று கொண்டு இருமுவது, தும்புவது, தலை வைத்து படுப்பது, வாசற்படியின் மேல் உக்காருவது, வாசலில் உட்காந்து கொண்டு மற்றவர்களை பற்றிய குறை பேசுவது, நகம் வெட்டுவது, இப்படித் தவறான விஷயங்களை அந்த இடத்தில் நாம் செய்யக்கூடாது. இது துர் தேவதைகளை நாமே உள்ளே அழைப்பதற்கு அறிகுரியாகும்.

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.