தற்பொழுதுள்ள காலத்தில் மக்கள் அதிகளவில் மொபைல் போன்களை பயன்படுத்த துவங்கிவிட்டனர். தற்பொழுது வரும் மொபைல் போன்கள் அனைத்தும் பல புதிய வசதியுடன் பல்வேறு தொழில்நுட்பங்களுடனும் வருகிறது.
அதில் குறிப்பாக, டைப்-சி போர்ட். இதன்மூலம் நாம் நமது மொபைலில் வேகமாக சார்ஜ் ஏத்துவது, தகவல்களை பரிமாற்றம் செய்துகொள்வது, போன்ற செயல்களை செய்து கொள்ள முடியும். ஆனால் பலரின் கவலை, இந்த டைப்-சி மொபைலிற்கு ஒரு பென்ட்ரைவ் இல்லையென.
இந்நிலையில், தற்பொழுது மக்களின் இந்த கவலையை சான் டிஸ்க் நிறுவனம் போக்கியது. அந்த நிறுவனம், டைப்-சி போர்திற்காக பென்ட்ரைவை கடந்த சில நாட்களுக்கு முன் வெளியிட்டது. இந்த பென்ட்ரைவ், வினாடிக்கு 150 Mpbs வேகத்தில் தகவல் பரிமாற்றம் செய்து கொள்ளலாம்.
இதன் ஒருபுறத்தில் யூ.எஸ்.பி டைப் இணைப்பும், மற்றொரு புறத்தில் யூ.எஸ்.பி -A இணைப்பையும் கொண்டுள்ளது. இது வழக்கமான கணினிகள் மற்றும் மடிக்கணினிகளுடன் பயன்படுத்த உருவாக்கப்பட்டுள்ளது. இந்த பென்ட்ரைவ், 6 வெரியன்டில் வருகிறது.
விலை:
32 GB வெரியன்ட்: ரூ.849
64 GB வெரியன்ட்: ரூ. 1,179
128 GB வெரியன்ட்: ரூ. 1,869
256 GB வெரியன்ட்: ரூ. 3,249
512 GB வெரியன்ட்: ரூ. 6,449
1 TB வெரியன்ட்: ரூ. 13,529
மேலும், இதில் 1 TB வெரியன்டுக்கு அமேசான், ரூ.650 வரை கேஷ்பேக் சலுகையும் வழங்குகிறது.