இயக்குநர் மணிரத்னம் மற்றும் 49 பிரபலங்கள் பேர் மீது தேசத்துரோக வழக்கு பதிவு !

இயக்குனர் மணிரத்னம் கோலிவுட் சினிமாவில் முன்னணி இயக்குநராக வலம் வருகிறார்.இவர் தற்போது “பொன்னியின் செல்வன்” படத்தை மிக பெரிய நட்சத்திர பட்டாளத்தை வைத்து எடுக்க இருக்கிறார்.
அந்த படத்தில் விக்ரம் ,ஜெயம் ரவி ,ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடிக்கிறார்கள்.இந்நிலையில் இயக்குநர் மணிரத்னம் நாட்டில்  சிறுபான்மை மக்கள் தாக்குவது குறித்து பிரதமர் மோடிக்கு எதிராக  கடிதம் எழுதினார்.
மேலும் இவருடன் சேர்ந்து 49 பிரபலங்களும் கடிதம் எழுதினார்கள். கும்பல் கொலைகளை கண்டித்து பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி இருந்தார்கள். எனவே மேலும் மணிரத்னம் மற்றும் பல பிரபலங்களின் கருத்துக்களால் இந்தியாவின் மதிப்பிற்கு பங்கம் வந்ததாக கூறி மணிரத்னம் மற்றும் 49 பிரபலங்களின் மீது தேசத்துரோக வழக்கு பதிவு போடப்பட்டுள்ளது.