அசாமில் ஏற்பட்ட நிலச்சரிவு.. 20 பேர் உயிரிழந்த சோகம்!

அசாம் மாநிலத்தில் உள்ள கச்சார் மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் 20 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியானது.

தெற்கு அசாமில் கடந்த சில நாட்களில் பலத்த மழை பெய்து வந்த நிலையில், கச்சார் மாவட்டத்தில் உள்ள லக்கிபூர் பகுதிக்கு அருகிலுள்ள பராக் பள்ளத்தாக்கு பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த நிலச்சரிவில் பலரும் காயமடைந்த நிலையில், 20 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியானது.