கோதையாறு அணையில் தண்ணீர் திறப்பு- முதலமைச்சர் உத்தரவு..!

கன்னியாகுமரி மாவட்டத்தில் கோதையாறு அணையில் 75 கன அடி  குடிநீர் மற்றும் பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விட முதலமைச்சர் பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கோதையாறு பாசனத் திட்ட அணைகளிலிருந்து திருநெல்வேலி மாவட்டம், இராதாபுரம் வட்டத்திற்கு குடிநீர் மற்றும் பாசனத்திற்காக, இராதாபுரம் கால்வாய்க்கு தண்ணீர் திறந்து விடுமாறு வேளாண் பெருங்குடி மக்களிடமிருந்து கோரிக்கைகள் வைத்தனர் .

இந்த நிலையில் மேலும் மக்களின் வேண்டுகோளை ஏற்று கொண்டு கன்னியாகுமரி மாவட்டம், கோதையாறு பாசனத்திட்ட அணையி லிருந்து வருகின்ற 15.7.2020 புதன் கிழமை முதல் அடுத்த மாதம் ஜூலை 13.8.2020 வரை 30 நாட்களுக்கு, ஒரு விநாடிக்கு 75 கன அடி வீதம், 194.40 மி.க.அடிக்கு மிகாமல் திருநெல்வேலி மாவட்டம், இராதாபுரம் வட்டத்திற்கு குடிநீர் மற்றும் பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விட முதலமைச்சர் பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில் இராதாபுரம் வட்டத்திற்கு குடிநீருக்கு தண்ணீர் கிடைப்பதுடன், 17000 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன் என்று  முதல்வர் அறிக்கையில் கூறியுள்ளார், மேலும் நீரை அனைத்து விவசாய பெருமக்கள் அனைவரும் சிக்கனமாக பயன்படுத்தி, உயர் மகசூல் பெற வேண்டுமாறு கேட்டுக்கொள்கிறேன். என்றும் கூறியுள்ளார்.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.