உஷாராய்யா உஷாரு!! Faceapp கிட்ட உஷாரா இருங்க!

பேஸ்புக், இன்ஸ்டாகிராம், ட்விட்டரில் தற்பொழுது தங்களது படங்களை வயதான படம் மூலம் பகிர்ந்து வருகின்றனர். இதன் காரணம், பேஸ்ஆப் (Face app) என்ற செயலி.

பேஸ்ஆப் 2017ம் ஆண்டே அறிமுகம் ஆனது. அனால் அப்போதே அந்த செயலி, பயனர்களின் அனுமதி இல்லாமலே அவர்களின் கைபேசியில் உள்ள புகைப்படங்களை எடுக்கிறது என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இரண்டாவது முறையாக இந்த குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 2017ம் ஆண்டு இந்த செயலி பயன்பாட்டுக்கு வந்தபோதே, பயனர்களின் தரவுகளை மூன்றாம் நபரிடம் பகிர வழிவகை செய்கிறது என அப்போதே பலர் குற்றஞ்சாட்டி இருந்தனர். மேலும் உங்களின் அனுமதியின்றி புகைப்படங்களை எடுக்கிறது என்றும் குற்றம் சாற்றி வந்தனர்.

https://twitter.com/JoshuaNozzi/status/1150962227433943040