6 பைக் பத்தாது.. இன்னொரு பைக் வேண்டும்.. வாங்கித்தர மறுத்ததால் தற்கொலை செய்த தொழிலதிபரின் மகன்..!

திருவானந்தபுரம், அனட் பகுதியை சேர்ந்தவர், தொழிலதிபர் அஜி குமார். இவர், தனது மனைவி லேகா, மகன் அகிலேஷ் மற்றும் மகள் அகிலாவுடன் கட்டயீக்கோணம் பகுதியில் வசித்து வந்தார். இவரின் மகன், தம்பனூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் படித்து வந்தார்.
அகிலேஷிடம் விலையுயர்ந்த ஆறு பைக் மற்றும் ஒரு சொகுசு காரும் உள்ளது. இதனை தொடர்ந்து, அகிலேஷ் அவரின் தந்தையிடம் 14 லட்சம் மதிப்புள்ள ஒரு பைக்கை வாங்கி தருமாறு கேட்டுள்ளார். அனால் அவர் தந்தை, ஏற்கனவே 6 பைக் இருந்ததால், அதனை வாங்கி தர மறுத்தார்.
இதனால் அவர் தனது தந்தையிடம் கடந்த சில நாட்களாக பேசாமல் இருந்தார். ஒருசில மாதங்களில் அந்த பைக்கை தந்தை வாங்கி தருவார் என்ற நம்பிக்கையுடன் இருந்தார். ஆனால், அவரின் நம்பிக்கை குறைந்தது. இந்நிலையில், 19ஆம் தேதி இரவு தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். நேற்று காலை நீண்ட நேரமாகியும் அகிலேஷ் இருந்த அறையின் கதவு திறக்கவில்லை.
சந்தேகமடைந்த அவரின் பெற்றோர், அரை கதவை உடைத்து பார்த்தபொது, அவர் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்தார். உடலை கைப்பற்றிய காவல்துறையினர், மருத்துவமனைக்கு அனுப்பினார். அதன் பின், நேற்று மாலை அவரின் உடல் அனட் பகுதியில் தகனம் செய்யப்பட்டது.