வரலாற்றில் இன்று(15.05.2020)..மனிதனை மனிதனாக்கும் அமைப்பான சர்வதேச குடும்ப தினம் இன்று…

மனிதன் தன் வாழ் நாளில்  தொடர்ந்து உயிர்ப்புடன்  இயங்குவதற்கு அடிப்படை ஆதாரமாக இருப்பது குடும்ப என்ற அமைப்பு தான். குடும்பம் ஒவ்வொரு மனிதனின் தேடலையும், சாதனைகளையும் படைப்பதற்கு ஊக்க சக்தியாக இருக்கும். இன்று சர்வதேச குடும்பதினம், இதுகுறித்த சிறப்பு தொகுப்பு. குடும்பம் என்பது குடு + இன்பம் , அதாவது இன்பங்களைத் தரும் இடங்கள் குடும்பங்களே. எப்படி  பெற்ற தாயின் மடியில் தலை வைத்திருந்தால் துயரம் தெரிவதில்லையோ, தெய்வங்கள் எல்லாம் தோற்றுப் போகும் தானே தந்தையின் அன்பு முன்னே. மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் தானே..பிள்ளைக் கனி அமுது தானே.இவையனைத்தும் சேர்ந்த நல்லதொரு குடும்பம் பல்கலைக் கழகம் தானே.. இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். அம்மாவை நேசிக்கும் ஒவ்வொரு பிள்ளையும் பின்னாளில்  மனைவியையும் நேசிப்பான். வீட்டில் தட்டிக் கொடுத்து வளர்க்கப்படும் குழந்தை தட்டிக் கொடுத்து வளர்க்கிறான் தன் குழந்தையை. குடும்ப பண்புகளை குழந்தைகளுக்கு கற்றுத் தாருங்கள். ‘கண்ணுக்குள்ளே வைச்சு வளர்த்திட்டேன்,பொத்தி பொத்தி வளர்த்துட்டேன்’ என வயிற்றுக்கு வெளியேயும் கருப்பை சுமந்து வளர்க்கப்படும் குழந்தைகள், குடும்ப கஷ்டங்களை உணர்வதில்லை. சாப்பாட்டுக்கே கஷ்டப்பட்ட தலை முறைகளின் வலிகள், இன்று சாப்பிடுவதற்கே கஷ்டப்படும் நவ நாகரிகத் தலை முறைகளுக்குப் புரியாது தான். குடும்ப உறவுகளின் உன்னதங்களையும்,வலிகளையும் அனுபவிக்கும்  குழந்தைகளே பெற்றோரின் முதுமைக் காலத்தில் அவர்களைக் காப்பாற்றுகின்றனர். வாய் விட்டு சிரித்தால் மட்டுமல்ல மனம் விட்டுப் பேசினால் கூட நோய் விட்டுப் போகும். ‘எனக்கு ஒன்னுனா கேக்குறதுக்கு எங்க தாய் மாமா இருக்காரு’ என்று கெத்து காட்ட முடிவதில்லை இன்று. காரணம் தனிக் குடும்ப அமைப்பு. தானாடாவிட்டாலும் தன் தசை ஆடும். கூட்டுக் குடும்ப உறவுகளாலே தான் இந்தப் பழமொழி சாத்தியமாகும். ஆனால் தற்போது குடும்பம் என்றால் கணவன், மனைவி, குழந்தை என மிகச்சிறிய வட்டத்திற்குள் சுருங்கிவிட்டது. பெற்றோர்களும் தன் குழந்தைகளை மாமியார், நாத்தனார் இல்லாத குடும்பத்தில் திருமணம் செய்துவைக்கவே விரும்புகின்றனர். இதனால் குடும்ப அமைப்பே சிதைந்து போகிறது. இப்படி பெற்றோரை கைவிட்டுவிட்டு எப்படி அவர்களால் மகிழ்வுடன் இருக்க முடிகிறது என்று தெரியவில்லை. பெற்றோர்களை முதியோர் இல்லங்களிலும் தெருவிலும் விட்டுவிட்டு இன்று மகிழ்வுடன்  இருக்கும் அனைவருக்கும் காலச்சக்கரம் சுழன்றுகொண்டே இருக்கிறது என்பதை யாரும் மறக்க வேண்டாம். அவரவர் கர்ம பலண்களை அவரவர் அடைந்தே தீர்வோம்.

Kaliraj

Recent Posts

கொளுத்தும் வெயிலில்.. இந்த 6 மாவட்டத்திற்கு அடுத்த 3 மணி நேரத்தில் கோடை மழை.!

Weather Update : அடுத்த 3 மணி நேரத்தில் 6 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது. தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் வெயில் வாட்டி…

18 mins ago

அசத்தலான சுவையில் முருங்கைக்காய் கிரேவி செய்வது எப்படி ?

முருங்கைக்காய் கிரேவி- முருங்கைக்காய் கிரேவி செய்வது எப்படி என்று பதிவில் காண்போம். தேவையான பொருட்கள் : முருங்கைக்காய் =3 வெங்காயம்=2 தக்காளி =2 சீரகம்=1 ஸ்பூன் எண்ணெய்…

20 mins ago

கட்டப்பா எதற்கு துரோகி ஆனார்? விரிவான விவரத்துடன் பாகுபலி : Crown of Blood!

Baahubali : Crown of Blood : பாகுபலி: கிரவுன் ஆஃப் ப்ளட் என்ற புதிய வெப் சீரிஸ்க்கான டிரைலர் வெளியாகியுள்ளது. இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் நடிகர்…

29 mins ago

மே 6 வரை வட தமிழக மாவட்டங்களில் வெப்ப அலை வீச வாய்ப்பு.!

Heat Wave : வட தமிழக உள் மாவட்டங்களில் அநேக இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும் என வானிலை மையம் கூறிஉள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலப்…

50 mins ago

‘இதனால தான் போட்டியில் திணறினோம் ..’ ! விளக்கமளித்த சிஎஸ்கே பயிற்சியாளர் !!

Stephen Fleming : ஐபிஎல் தொடரின், சிஎஸ்கே அணியின் தலைமை பயிற்சியாளரான ஸ்டீபன் ஃப்ளெமிங் தீபக்  சஹாரின் உடல் நிலை குறித்தும், நேற்று சிஎஸ்கே அணியில் நடந்த மாற்றங்கள்…

1 hour ago

உங்கள் அன்புக்குரிய செல்லப் பிராணிகளை கோடை காலத்தில் பராமரிப்பது எப்படி?

Summer tips for dog -கோடை காலத்தில் நாய்களை பராமரிப்பது எப்படி என இப்பதிவில் தெரிந்து கொள்வோம். ஹீட் ஸ்ட்ரோக்கிலிருந்து நாய்களை பாதுகாக்கும் முறை: வெயில் தாக்கம்…

1 hour ago