மருத்துவ பரிசோதனைகளுக்கு தற்போது இருக்கும் ரூ. 5,000 வரையிலான வரி விலக்கை விலைவாசி உயர்வுக்கு ஏற்ப ரூ.20,000 ஆக அதிகரிக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் கோரிக்கை வைதுள்ளனர். மருத்துவ செலவுக்கான வரி விலக்கு பற்றிய அறிவிப்பு நடப்பு பட்ஜெட் தாக்கலின் போது வெளியாகும் என்று தெரிகிறது.
இந்தியாவில் வருமான வரிச்சட்டம் நடைமுறை வந்ததில் இருந்து கிடைக்கும் வரி தொகையில் 75 சதவிகிதம் தனிநபர் மற்றும் மாத சம்பளம் பெறுபவர்களிடம் இருந்து தான் கிடைக்கிறது. ஆனால், அதற்கான வருமான வரிச் சலுகையானது இவர்களுக்கு கிடைப்பதில்லை. மாறாக பெரும் நிறுவனங்களுக்கு மட்டுமே வருமான வரிச்சலுகை பெருமளவு கிடைக்கிறது என்ற குற்றச்சாட்டை பலர் முன் வைத்தனர். அவர்களுக்காகவே கடந்த பிப்ரவரி மாதம் வெளியான இடைக்கால பட்ஜெட் அறிவிப்பில், தனிநபர் வருமான வரி விலக்கு ரூ.2.5 லட்சத்திலிருந்து 5 லட்சமாக உயர்த்தப்பட்டது.
மேலும், வருமான வரிச்சட்டம் 80 D யின் படி ,தற்போது மருத்துவ பரிசோதனைக்காக அளிக்கப்பட்டு வரும் வரி விலக்கை ரூ.5,000 இருந்து ரூ,20,000 ஆக உயர்த்த வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது. இந்த கோரிக்கையானது தேசிய அளவில் முக்கியமானதாக தெரிகிறது.ஆனால் அண்மையில் நடந்த நிதித்துறை அதிகாரிகள் கூட்டத்தில் மருத்துவ பரிசோதனைக்கான வரி விலக்கை ஆண்டொன்றுக்கு ரூ,10,000 மட்டுமே உயர்த்த முடியும் என்று நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
Olympic 2024 : இந்தியாவை சேர்ந்த நீளம் தாண்டும் தடகள வீரரான ஸ்ரீசங்கர் ஒலிம்பிக் போட்டியிலிருந்து விலகி உள்ளார். இந்த ஆண்டில் நடைபெற இருக்கும் ஒலிம்பிக் போட்டியில் இந்திய…
Weather Update: தமிழகத்தில் மே 1ம் தேதி முதல் வெப்ப அலை வீசக்கூடும் என தனியார் வானிலை ஆய்வாளர் தகவல் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கடந்த சில வாரங்களாகவே…
Nirmala Devi: கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்திய வழக்கில் நிர்மலாதேவி ஆஜராகாததால் தீர்ப்பை வருகிற 29-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் உள்ள தனியார் கலைக்…
Rathnam : விஷால் நடிப்பில் வெளியாகியுள்ள ரத்னம் படத்தின் ட்வீட்டர் விமர்சனம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. இயக்குனர் ஹரி இயக்கத்தில் நடிகர் விஷால் நடிப்பில் உருவாகியுள்ள ரத்னம் திரைப்படம்…
IIT JAM 2024 : ஐஐடியில் முதுகலை படிப்புகள் படிக்க விரும்பும் மாணவர்கள் விண்ணப்பிக்க கால அவகாசம் ஏப்ரல் 29ஆம் தேதி வரையில் நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்தியவில் மிகவும்…
Tech Mahindra: ஐடி நிறுவனமான டெக் மஹிந்திரா நிறுவனம் இந்த ஆண்டு, 6000 இளைஞர்களை புதியதாக பணியில் அமர்த்த முடிவு செய்துள்ளது. நாட்டின் ஐந்தாவது பெரிய தகவல்…