காங்கிரஸ் கட்சி இந்திய பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்தை ஏன் இவ்வளவு வெறுக்கிறது என அமித்ஷா கேள்வி.
வரும் மே 28 ஆம் தேதி புதிய பாராளுமன்ற கட்டிடம் திறந்து வைக்கப்பட இருக்கிறது, இதில் தமிழ்நாட்டிலிருந்து வழங்கப்பட்ட செங்கோல் இடம்பெறுவது முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. இந்த செங்கோல் குறித்து தற்போது காங்கிரஸ் கட்சியின் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்த கருத்துக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கேள்வியெழுப்பியுள்ளார்.
இது குறித்து அமித்ஷா தனது ட்விட்டரில், காங்கிரஸ் கட்சி ஏன் இந்திய பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்தை வெறுக்கிறது. இந்தியா சுதந்திரம் அடைந்ததை அடையாளப்படுத்தும் விதமாக தமிழ்நாட்டிலிருந்து புனித சைவ மடத்தால் பண்டித நேருவுக்கு ஒரு புனிதமான செங்கோல் வழங்கப்பட்டது, ஆனால் அது வெறும் கைத்தடியாக அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டது.
தற்போது காங்கிரஸ் மற்றொரு வெட்கக்கேடான செயலில் ஈடுபட்டுள்ளது, திருவாவடுதுறை ஆதீனம், ஒரு புனித சைவ மடம், இந்தியா சுதந்திரம் பெற்ற நேரத்தில் செங்கோலின் முக்கியத்துவத்தைப் பற்றி எடுத்துக்கூறியது. ஆனால் காங்கிரஸ் தற்போது ஆதீனத்தின் வரலாற்றை போலி என்கிறது. முதலில் காங்கிரஸ் அவர்களின் நடத்தையை சிந்தஹிக்க வேண்டும் என்று பதிவிட்டுள்ளார்.
முன்னதாக காங்கிரஸ் கட்சியின் ஜெய்ராம் ரமேஷ், சுதந்திரம் அடைந்த சமயத்தில் ஆகஸ்ட் 1947 இல் நேருவுக்கு வழங்கப்பட்ட செங்கோல் விவகாரத்தில், மவுண்ட்பேட்டன், ராஜாஜி & நேரு ஆகியோர் இந்த செங்கோலை பிரிட்டிஷ் அதிகாரத்தை இந்தியாவுக்கு மாற்றியதற்கான அடையாளமாக விவரித்ததற்கு எந்தவித ஆவண ஆதாரங்கள் எதுவும் இல்லை.
இவை அனைத்தும் தற்போது தமிழகத்தில் தங்கள் அரசியல் நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படுவதாக அவர் குற்றம் சாட்டினார். இந்த கருத்துகளுக்கு பதிலளிக்கும் விதமாக அமித்ஷா, காங்கிரஸ்-இன் செயலுக்கு கடுமையாக சாடியுள்ளார்.
Kenya : கென்யாவில் கனமழை காரணமாக அணை உடைந்து வெள்ளம் ஏற்பட்டு 50 பேர் பரிதாபமாக இறந்துள்ளனர். கென்யாவில் கடந்த மார்ச் மாதம் முதல் கனமழை வெளுத்து…
Weather Update : தமிழகத்தில் வெப்பநிலை உயரும் எனவும், மழைக்கு வாய்ப்புள்ளது எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவலை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வெயிலின் தாக்கம் நாளுக்கு…
Naxalites: சத்தீஸ்கரில் 7 நக்சலைட்டுகளை பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்றனர். சத்தீஸ்கர் மாநிலத்தில் நாராயண்பூர் மற்றும் கான்கேர் மாவட்ட எல்லைப் பகுதியில் உள்ள அபுஜ்மத் என்ற வனப்பகுதியில் பாதுகாப்புப்…
Prajwal Revanna : பாலியல் புகார் விசாரணை முடியும் வரையில் மஜத எம்.பி பிரஜ்வல் ரேவண்ணா கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். கர்நாடகாவின் ஹாசன் தொகுதி எம்.பியாக…
Heat Wave: வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் அதிலிருந்து நம்மை எவ்வாறு பாதுகாத்து கொள்வது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக தமிழ்நாடு…
Shah Rukh Khan : ரிஷப் பண்டுக்கு ஏற்பட்ட கார் விபத்தில், அவருக்கு ஒன்றும் ஆக கூடாது என்று நடிகர் ஷாருக் கான் கவலைப்பட்ததாக நேற்றைய போட்டியின் முடிவின்…