தமிழகத்தில் 100-க்கு 95% பேர் செல்போன் வைத்திருந்ததால் வீணாகக் கூடாது என்பதால் நாங்கள் வழங்கவில்லை என திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்தார்.
திமுக தனது தேர்தல் வாக்குறுதிகளை உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தி திமுக அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் அதிமுகவினர் அனைவரும் அவர்கள் வீடுகளுக்கு முன் பதாகைகளை ஏந்தி போராட்டத்தில் ஈடுபடுவார்கள் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, இன்று தமிழகம் முழுவதும் திமுக அரசை கண்டித்து அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், 2016-ம் ஆண்டு தேர்தலில் இலவசமாக செல்போன் வழங்குவதாகச் சொன்னீர்கள் ஏன் வழங்கவில்லை என கேள்வி எழுப்பியதற்கு, விசாரித்ததில் செல்போன் இல்லாமல் யாரும் இல்லை, அது தேவையில்லாமல் ஒன்றாக போய்விட்டது.
அதனால், இந்த தேர்தல் அறிக்கையில், வாஷிங் மெஷின், இருசக்கர வாகனம், வருடத்திற்கு 6 சிலிண்டர் கொடுப்பதாக சொன்னோம், மின்சார அடுப்பு, வீடு இல்லாதவர்களுக்கு நிலம் வாங்கி வீடு கட்டித்தருவதாக சொன்னோம். தமிழகத்தில் 100-க்கு 95% பேர் செல்போன் வைத்திருந்ததால் வீணாகக் கூடாது என்பதால் நாங்கள் வழங்கவில்லை என திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்தார்.
IPL2024:ராஜஸ்தான் அணி 20 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து 200 ரன்கள் எடுத்தனர். இதனால் ஹைதராபாத் அணி 1 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில்…
Andhra pradesh: ஆந்திராவில் ரூ.2,000 கோடி பணத்துடன் சென்ற 4 கண்டெய்னர்கள் பிடிபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆந்திராவில் மே 13ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளதால் பறக்கும்…
Indian Team : டி20 அணியை அறிவித்த பிறகு இந்திய அணியில் இடம்பெற்றுள்ள சில வீரர்கள் அடுத்தடுத்து ஐபிஎல் போட்டியில் சொதப்பி வருவதால், ரசிகர்கள் கவலையில் இருக்கின்றனர். வருகிற…
Prajwal Revanna : கிருஷ்ணரின் சாதனையை முறியடிக்க பிரஜ்வல் ரேவண்ணா முயற்சித்துள்ளார் என கர்நாடகா காங்கிரஸ் அமைச்சர் சர்ச்சையாக கருத்து தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலம் ஹாசன் தொகுதி…
Annamalai Biopic : தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் வாழ்கை வரலாற்று படம் எடுக்கப்படவுள்ளதாகவும் அதில் விஷால் நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள்,…
Weather Update : அடுத்த 3 மணி நேரத்தில் 6 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது. தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் வெயில் வாட்டி…