இந்த மாதத்தில் கோவாக்சின் தடுப்பூசிக்கு WHO ஒப்புதல் அளிக்க வாய்ப்பு…!

இந்த மாதத்தில் கோவாக்சின் தடுப்பூசிக்கு உலக சுகாதார அமைப்பு ஒப்புதல் அளிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. 

உலகம் முழுவதிலும் பரவி வரக் கூடிய கொரோனா வைரஸுக்கு எதிராக பல்வேறு நாடுகளிலும் தடுப்பூசிகள் கண்டறியப்பட்டு பயன்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது. அந்த வகையில் இந்தியாவிலும் கோவிஷீல்ட், கோவாக்சின் மற்றும் ஸ்புட்னிக் வி ஆகிய தடுப்பூசிகளுக்கு அவசர கால அடிப்படையில் மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

மேலும், அமெரிக்காவில் பயன்படுத்தப்படக் கூடிய ஃபைஸா், ஜான்சன் & ஜான்சன், மாடா்னா மற்றும் சீனாவில் பயன்படுத்தப்படும் சைனோபார்ம், பிரிட்டனில் பயன்படுத்தப்படும் கோவிஷீல்ட் ஆகிய தடுப்பூசிகளுக்கு உலக சுகாதார அமைப்பு அவசர கால அடிப்படையில் பயன்படுத்த அனுமதி அளித்துள்ளது. ஆனால் இந்தியாவில் பாரத் பயோடெக் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட கோவாக்சின் தடுப்பூசிக்கு உலக சுகாதார அமைப்பு ஒப்புதல் அளிக்கவில்லை.

இந்நிலையில் இந்த தடுப்பூசி தான் நாடு முழுதும் பலருக்கு செலுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த தடுப்பூசிக்கு ஒப்புதல் அளிக்க தேவையான ஆவணங்களை உலக சுகாதார அமைப்பிடம் பாரத் பயோடெக் நிறுவனம் வழங்கியுள்ளதாக கடந்த ஜூலை மாதம் மத்திய அரசு தெரிவித்திருந்த நிலையில், கோவாக்சின் தடுப்பூசியின் அவசரகால பயன்பாட்டிற்கு இந்த மாதம் உலக சுகாதார அமைப்பு அனுமதியளிக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Recent Posts

6 ஆண்டுகளில் 6 கோடி வேலைவாய்ப்புகள்..  பிரதர் மோடி தகவல்.!

சென்னை:  கடந்த 6,7 ஆண்டுகளில் 6 கோடி வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன என பிரதர் மோடி பேட்டியளித்துள்ளார். மக்களவை தேர்தல் இறுதிகட்டத்தை எட்டி வருவதால் அரசியல் தலைவர்களின் பிரச்சாரமும்…

20 mins ago

கர்ப்ப காலத்தில் ஏற்படும் வாந்தி நிற்க உதவும் உணவுகள் இதோ.!

Pregnancy food- கர்ப்பிணிகள் வாந்தி நிற்பதற்கும் மற்றும் முக்கியமாக எடுத்துக் கொள்ள வேண்டிய உணவுகள் பற்றியும் இப்பதிவில் காணலாம். கர்ப்பிணிகள்  முதல் மூன்று மாதங்கள் மிகக் கவனமாக…

35 mins ago

நத்திங் கீழ் CMF வெளியிடும் முதல் 5G ஸ்மார்ட்போன்.! பட்ஜெட் விலையில் எப்போது அறிமுகம்?

CMF Phone 1 : நத்திங் (Nothing) நிறுவனத்தின் துணை பிராண்டான CMF தனது முதல் ஸ்மார்ட்போனை விரைவில் இந்தியாவில் அறிமுகப்படுத்த உள்ளது. நத்திங் (Nothing) நிறுவனம்…

40 mins ago

புதிய வரலாற்றை படைத்த மான்செஸ்டர் சிட்டி ..! 4 கோப்பைகளை கைப்பற்றிய முதல் அணி என்ற சாதனை !

சென்னை : பிரீமியர் லீக் தொடரில் இறுதிப் போட்டியில் மான்செஸ்டர் சிட்டி வெஸ்ட் ஹாம் அணியை வீழ்த்தி வெற்றி பெற்று 4-வது முறையாக தொடர்ந்து சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றி…

51 mins ago

ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி ஹெலிகாப்டரில் கடைசியாக பயணித்த வீடியோ காட்சி…

சென்னை: ஈரான் அதிபர் ஹெலிகாப்டர் விபத்தில் சிக்குவதற்கு முன்னர் எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி உள்ளன. ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி நேற்று ஈரான் -…

1 hour ago

தமிழகத்தில் 4 மணி வரை இந்த 22 மாவட்டத்துக்கு மழை எச்சரிக்கை!

சென்னை : தமிழகத்தில் 4 மணி வரை 22 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தகவலை தெரிவித்துள்ளது. தமிழகத்தில், இந்த கோடை காலத்திலும்…

2 hours ago