கொரோனா காரணமாக திரையரங்குகள் அனைத்தும் மூடப்பட்டுள்ள நிலையில், கேரளா முழுவதும் வருகின்ற ஜனவரி 13ம் தேதியே மாஸ்டர் படம் திரையிடப்பட உள்ளதாக அதிகாரபூர்வ தகவல் வெளியாகி உள்ளது.
லோகேஷ் கனகராஜ் அவர்களின் இயக்கத்திலும் அனிருத்தின் இசையமைப்பில் உருவாகியுள்ள விஜய்யின் மாஸ்டர் படம் வருகிற பொங்கலுக்கு உலகமெங்கிலும் உள்ள தியேட்டர்களில் ரிலீஸ் ஆக உள்ளது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை மாளவிகா மோகன் நடித்துள்ளார். படத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி வில்லனாக அட்டகாசமாக நடித்து உள்ளார். இந்தியா முழுவதும் பொங்கலுக்கு முன்தினம் ஜனவரி 13 ஆம் தேதி வெளியிடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மட்டுமல்லாமல் பல்வேறு மாநிலங்களிலும் விஜய்க்கு ஏராளமான ரசிகர்கள் இருப்பதால் ஒவ்வொரு மாநிலத்தில் உள்ள ரசிகர்களும் தற்பொழுது டிக்கெட் வாங்க ஆரம்பித்து விட்டதுடன், பலரும் இதைக் கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில், தளபதி ரசிகர்கள் ஜனவரி 13எப்போது வருமென ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நிலையில், கேரளா மாநிலத்தில் கொரோனா ஊரடங்கு காரணமாக திரையரங்குகள் இன்னும் திறக்கப்படாததால் அங்குள்ள தளபதி ரசிகர்கள் சோகத்தில் இருந்தனர். அதன் பின் முதல்வருடனான பேச்சு வார்த்தைக்கு பிறகு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகிய நிலையில், கேரளா மாநிலம் முழுவதிலும் வருகிற ஜனவரி 13ம் தேதியே மாஸ்டர் படம் திரையிடப்பட உள்ளது என ஸ்ரீதேவி ஸ்ரீதர் அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில் அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார். எனவே அங்குள்ள விஜயின் ரசிகர்கள் ஆரவாரமாக கொண்டாடி வருகின்றனர்.
IPL2024: சென்னை அணி 20 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து 191 ரன்கள் எடுத்தனர். இதனால் பெங்களூர் அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய…
சென்னை: ஜம்மு காஷ்மீர் அனந்த்நாக்கில் தம்பதி மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிசூடு நடத்தியுள்ளனர். ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக் பகுதியில் ஓர் தம்பதி மீது பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தியுள்ளனர்.…
சென்னை : ஐபிஎல் தொடரின் இறுதி போட்டியானது முடியும் முன்னரே டி20 உலகக்கோப்பை அணியில் இடம் பெற்றுள்ள இந்திய வீரர்கள் நியூயார்க் புறப்பட உள்ளனர். இந்த ஆண்டு ஜூன்…
சென்னை: கனமழை எதிரொலியை தொடர்ந்து சுற்றுலா பயணிகளுக்கு பேரிடர் மேலாண்மைத்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது. கடந்த சில நாட்களாக தமிழகத்தில் கனமழை பெய்து வரும் நிலையில், ஒரு சில…
சென்னை: நாளை காலை பாஜக அலுவலகம் முன்பு அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் முற்றுகை போராட்டம் நடைபெற உள்ளது. டெல்லி மாநில முதல்வரும், ஆம் ஆத்மி கட்சி தலைவருமான…
சென்னை : இன்று நடக்கும் ஐபிஎல் போட்டியில் மழை வரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதால், ஒருவேளை மழை குறுக்கிட்டால் ஐபிஎல் போட்டிகளில் ஓவர்கள் எப்படி குறைக்கிறார்கள்…