Cobra - syrup bottle

நாகப்பாம்பு வாயில் சிக்கிய மருந்து பாட்டில்! வைரல் வீடியோ…

By

ஒடிசா: புவனேஸ்வரில் தனது இரை என நினைத்து இருமல் மருந்து பாட்டிலை நாகப்பாம்பு உட்கொண்ட போது அதன் வாயில் சிக்கிக் கொண்டது. பின்னர், வலியால் துடித்த நாகப்பாம்புவின் வாயில் இருந்து மருந்து பாட்டில் பத்திரமாக எடுக்கப்பட்டது.

அந்த நாகப்பாம்புவின் விலைமதிப்பற்ற உயிர் எப்படி காப்பாற்றப்பட்டது தொடர்பான காட்சிகள் இணையத்தில் பரவி வருகிறது. இந்த சம்பவத்தை படம் பிடித்த சுசாந்தா நந்தா என்பவர் தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார். பாட்டில் அகற்றப்பட்ட பிறகு, பாம்பு பாதுகாப்பான இடத்தில் விடப்பட்டது.

வீடியோவை பகிர்ந்து கொண்ட அவர், “ஒரு நாகப்பாம்பு ஒரு இருமல் மருந்து பாட்டிலை விழுங்கியது மற்றும் அதை மீட்டெடுக்க போராடியது. பின்னர், ஸ்னேக் ஹெல்ப்லைனின் தன்னார்வலர்கள் வரவழைக்கப்பட்டு, தாடையை மெதுவாக விரித்து பாட்டிலின் அடிப்பகுதியின் விளிம்பை கஷ்டப்பட்டு விடுவித்து உயிரைக் காப்பாற்றினர்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Dinasuvadu Media @2023