வேலூர்,
ஜாக்டோ– ஜியோ மற்றும் கிராப் கூட்டமைப்புகள் சார்பில் நேற்று மாநிலம் முழுவதும் 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. வேலூரில் அண்ணாகலையரங்கம் அருகில் உண்ணாவிரத போராட்டம் நடந்தது. தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய மாவட்ட தலைவர் அருணகிரிநாதன், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில தலைவர் சுதாகரன், தமிழ்நாடு மேல்நிலை பள்ளி முதுகலை பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட தலைவர் பாஸ்கரன் ஆகியோர் தலைமை தாங்கினர்.
தமிழ்நாடு தொடக்க, நடுநிலை பள்ளி பட்டதாரி ஆசிரியர் சங்க மாநில பொதுச்செயலாளர் சி.சேகர் உணாவிரத போராட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய மாநில தலைவர் ரா.சண்முகராஜன், தமிழ்நாடு கூட்டுறவு தணிக்கைத்துறை அலுவலர் சங்க மாநில தலைவர் விக்டர்பால்ராஜ் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர்.
1–4–2003 முதல் பணிநியமனம் செய்யப்பட்ட அரசு அலுவலர்கள், பணியாளர்கள், ஆசிரியர்களுக்கு பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், அரசு அலுவலர்கள், பணியாளர்கள், ஆசிரியர்களுக்கு ஊதியக்குழு நிலுவைத்தொகையினை 1–1–2018 முதல் பணப்பயனாக வழங்கவேண்டும் என்பது உள்பட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.
முடிவில் தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்கள் சங்க மாவட்ட செயலாளர் புண்ணியகோட்டி நன்றி கூறினார்.
ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியில் பெங்களூரு அணியும், குஜராத் அணியும் மோதுகிறது. நடைபெற்று வரும் இந்த ஐபிஎல் தொடரில் இன்றைய 51-வது போட்டியில்…
IPL2024: மும்பை அணி 18.5 ஓவரில் அனைத்து விக்கெட்டைகள் இழந்து 145 ரன்கள் எடுத்தனர். இதனால் கொல்கத்தா அணி 24 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில்…
Ricky Ponting : தற்போது நடைபெறுகிற டி20 கிரிக்கெட் போட்டிகளின் மாற்றங்களை குறித்து ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் பேட்டி ஒன்றில் பகிர்ந்து இருந்தார். ஆஸ்திரேலியா அணியின்…
Bloody Beggar Promo: நெல்சன், கவின் இணையும் படத்தின் ஜாலியான புரொமோ வீடியோவும், முதல் பார்வையும் இணையத்தை கலக்கிய வருகிறது. நடிகர் கவின் தற்போது ஸ்டார் படத்தில்…
ICC Ranking : ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் இந்திய அணியை பின்னுக்கு தள்ளி ஆஸ்திரேலியா அணி நம்பர் 1 இடத்தில் முன்னேறி உள்ளது. ஐசிசி, தங்களது டெஸ்ட்…
Election Campaign : சோனியா காந்தி 20 முறை ராகுல் காந்தியை முன்னிறுத்தி தோல்வியடைந்துள்ளார் என அமித்ஷா விமர்சித்துள்ளார். இரண்டு கட்ட மக்களவை தேர்தல் நிறைவடைந்துள்ள நிலையில்,…