இவரை தான் திருமணம் செய்வோம் என்று முறைப்பெண்கள்..! இருவரையும் ஒரே மணமேடையில் திருமணம் செய்த வேலாடி அர்ஜுன்..!

தெலங்கானாவை சேர்ந்த வேலாடி அர்ஜுன் தனது இரு அத்தை மகள்களை ஒரே மணமேடையில் வைத்து திருமணம் செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தெலங்கானா மாநிலம் கான்பூர் கிராமத்தை சேர்ந்தவர் வேலாடி அர்ஜுன். இவர் ஆசிரியர் பயிற்சி முடித்துள்ளார். கடந்த 3 வருட காலமாக இவரது அத்தை மகள்களான கான்பூரை சேர்ந்த உஷாராணி மற்றும் ஷம்புக்குடா கிராமத்தை சேர்ந்த சுரேகா என்ற இருவரையும் ஒருவருக்கொருவர் தெரியாமல் காதலித்து வந்துள்ளார்.

இந்நிலையில் இருவரையும் 1 மாதத்திற்கு முன் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து, அதை இருவரிடமும் கேட்டுள்ளார். இருவரும் ஒப்புக்கொள்ள, வீட்டில் இதுகுறித்து பேசிய போது, பெரியவர்கள் இருவரையும் திருமணம் செய்ய மறுப்பு தெரிவித்துள்ளனர். இது முறையான காரியம் அல்ல என்றும் கூறியுள்ளனர். ஆனால், இரு அத்தை மகள்களும் கட்டினால் இவரை தான் கட்டுவோம் என்ற முடிவான கருத்தை வீட்டில் எடுத்து வைத்துள்ளனர்.

இதன் பின்னர் வேறு வழியின்றி பெரியவர்கள் சம்மதிக்க, இருவரையும் கடந்த 14 ஆம் தேதி ஒரே மணமேடையில் வைத்து திருமணம் செய்துள்ளார். இருவரையும் இவர்களது ஆதிவாசிகள் முறைப்படி திருமணம் செய்து கொண்டுள்ளார். மேலும், இது போன்ற சம்பவம் அங்கு நிகழாததால் இந்த திருமணம் குறித்த பேச்சு தான் அங்கு பரவலாக பேசப்படுகிறது.

Recent Posts

நீங்கள் எட்டு வடிவ நடை பயிற்சி செய்பவரா? இதெல்லாம் அவசியம் தெரிஞ்சுக்கோங்க.!

8 வடிவ நடை பயிற்சி-எட்டு வடிவ நடை பயிற்சி செய்யும் முறை அதன் பயன்கள்,தவிர்க்க வேண்டியவர்கள் பற்றி இப்பதிவில் காணலாம். 8 வடிவ நடை பயிற்சி செய்யும்…

1 hour ago

சுட்டெரிக்கும் வெப்பநிலை… அதிகரிக்கும் வெப்ப அலை… காரணம் என்ன.?

Heat Wave : வழக்கத்தை விட இந்தாண்டு வெப்பநிலை அதிகரிக்க 2 காரணங்களை இந்திய வானிலை ஆய்வு மைய ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். வழக்கத்தை விட இந்தாண்டு வெயிலின்…

3 hours ago

என்னங்க சொல்லறீங்க? இது மட்டும் நடந்தா மும்பை ப்ளே ஆஃப் செல்லுமா?

Mumbai Indians : ஐபிஎல் தொடரில் நட்சித்திர அணியான மும்பை இந்தியன்ஸ் 7 தோல்விகளுக்கு பிறகும் ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெரும் வாய்ப்புகளை பற்றி பார்ப்போம்.…

4 hours ago

திடீரென பயங்கரமாக வெடித்து சிதறிய கல்குவாரி …விபத்து நடந்தது எப்படி.?

Virudhunagar: விருதுநகர் மாவட்டத்தில் கல்குவாரி ஒன்றில் ஏற்பட்ட வெடி விபத்தில் இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளனர். விருதுநகர் அருகே ஆவியூரில் உரிமம் பெற்ற கல் குவாரியும், வெடி…

4 hours ago

அடேங்கப்பா.! ரத்த அழுத்தத்தை கூட குறைக்குமாம் தர்பூசணி விதைகள்.!

Watermelon seeds-தர்பூசணி விதைகளின் ஆரோக்கிய நன்மைகளை இப்பதிவில் தெரிந்து கொள்வோம். தர்பூசணியை சாப்பிட்டுவிட்டு அதன் விதைகளை தூக்கி எரிந்து விடுவோம். ஆனால் அந்த விதைகள்  நம்மில் பலரும்…

4 hours ago

ஸ்டார் படத்தை பார்த்துவிட்டு கவினுக்கு கால் செய்த சிம்பு! என்ன சொல்லிருக்காரு தெரியுமா?

STAR : ஸ்டார் படத்தை பார்த்துவிட்டு நடிகர் கவினுக்கு கால் செய்து சிம்பு பாராட்டியுள்ளார். நடிகர் கவின் டாடா திரைப்படத்தின் பெரிய வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக பியார்…

4 hours ago