டெல்லியில் விவசாயிகள் போராட்டம் தொடர்பாக இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் பிரதமர் போரிஸ் ஜான்சன், இந்தியா – பாக் பிரச்சனை என பேசியுள்ளது, சர்ச்சைக்குள்ளானது.
வேளாண் சட்டங்களுக்கு எதிராக ஹரியானா, குஜராத், பஞ்சாப், உள்ளிட்ட பல மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் ஆயிரக்கணக்கானோர், டெல்லியில் போராட்டம் நடத்திக்கொண்டு வருகின்றனர். இந்த போராட்டம் சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்துள்ள நிலையில், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இந்த போராட்டத்திற்கு ஆதரவளிப்பதாக தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில், இந்த போராட்டம் தொடர்பாக இங்கிலாந்தின் கவலைகளை இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு தெரியப்படுத்துமாறு அந்நாட்டு எதிர்க்கட்சி எம்.பி.யும், சிக்கிம் மாநிலத்தை சேர்ந்த தன்மன்ஜீத் சிங் தேசி நாடாளுமன்றத்தில் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு கோரிக்கை விடுத்தார். இதற்கு பிரதமர், விவசாயிகள் பிரச்னை, இந்தியா-பாகிஸ்தான் இடையே தீர்க்க வேண்டிய பிரச்னை என பதிலளித்தார்.
மேலும் பேசிய அவர், இந்தியா-பாகிஸ்தான் இடையே என்ன நடக்கிறது? என்பது குறித்து தீவிர கவலைகள் உள்ளதாகவும், ஆனால் இவை அனைத்துக்கும் தீர்வுகாண இவ்விரு நாடுகளும் முன்வருகின்றன என கூறிய அவர், இரு நாடுகளுக்கு இடையேயான பிரச்னையை பேச்சுவார்த்தை மூலமாக தீர்வுக்காண வேண்டும் என்பதே எங்களின் நிலைப்பாடு என தெரிவித்துள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த எதிர்க்கட்சி எம்.பி. தேசி, தனது டுவிட்டர் பக்கத்தில், வேளாண் சட்டங்கள் பற்றி இந்தியாவில் அமைதி வழியில் போராட்டத்தில் ஈடுபடும் விவசாயிகள் மீது கண்ணீர் புகைக்குண்டு பயன்படுத்தியதை கண்டு பலரும் அச்சமடைந்தனர். அகிம்சையாக போராடுவது அனைவரின் அடிப்படை உரிமையாகும். நமது பிரதமர் என்ன பேசுகிறார் என்பதை அவர் உணர்ந்திருந்தால், நன்றாக இருக்கும் என அந்த பதிவில் தெரிவித்துள்ளார்.
IPL2024: பஞ்சாப் அணி 18.4 ஓவரில் 2 விக்கெட்டைகள் இருந்து 262 ரன்கள் எடுத்தனர். இதனால் பஞ்சாப் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றனர். இன்றைய போட்டியில்…
Devon Conway : நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் இந்த விதி நல்லது தான் என ஆதரித்துள்ளார் சிஎஸ்கே அணியின் வீரரான டேவான் கான்வே. ஐபிஎல் தொடரின்…
Priya Anand : நடிகை பிரியா ஆனந்த் படுகிளாமராக நடித்து இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் படங்களில் நடித்து முன்னணி நடிகையாக…
Inga Naan Thaan Kingu : சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள இங்க நான் தான் கிங்கு படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. வடக்குப்பட்டி ராமசாமி படத்தின் வெற்றியை தொடர்ந்து…
Realme C65 5G : ரியல்மி நிறுவனம் தனது அடுத்த 5ஜி ஸ்மார்ட் போனான ரியல்மி சி65 5ஜி வெளியிட்டது. ரியல்மி நிறுவனம் இந்த ஆண்டில் அடுத்தடுத்து…
DeepFake : 75 சதவீத இந்தியர்கள் போலியான டீப்ஃபேக் வீடியோக்களை பார்த்துள்ளனர் என ஓர் ஆய்வறிக்கை வெளியாகியுள்ளது. தொழில்நுட்ப உலகில் அதிவேகமாக வளர்ந்து வரும் AI எனும்…