UK தேர்தல்: ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சி 81 இடங்களில் மட்டுமே வென்றுள்ளது. தொழிலாளர் கட்சி 360 இடங்களை வென்றுள்ளது.
இங்கிலாந்து நாட்டில் நேற்று (வியாழன்) 650 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக பிரதமருக்கான தேர்தல் நடைபெற்றது. இதில் ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சி சார்பாக தற்போதைய பிரதமர் ரிஷி சுனக்கும், தொழிலாளர் கட்சி சார்பாக கீர் ஸ்டார்மரும் பிரதான பிரதமர் வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்.
நேற்று உள்ளூர் நேரப்படி காலை 7 மணிக்கு ஆரம்பித்த தேர்தல் இரவு 10 மணிக்கு நிறைவடைந்தது. இதனை அடுத்து இன்று (வெள்ளி) உள்ளூர் நேரப்படி அதிகாலை முதலே வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. மொத்தம் 650 இடங்கள் கொண்ட பிரிட்டன் தொகுதிகளில் பெரும்பான்மை நிரூபிக்க ஒரு கட்சிக்கு 326 உறுப்பினர்களின் ஆதரவு தேவை.
இதுவரை வெளியான வாக்கு எண்ணிக்கை நிலவரம் அடிப்படையில் ஆரம்பம் முதலே தொழிலாளர் கட்சி முன்னிலை பெற்று வருகிறது. சுமார் 14 ஆண்டுகள் தொடர்ந்து ஆட்சி செய்து வந்த கன்சர்வேட்டிவ் கட்சி ஆட்சி காலம் நிறைவு பெரும் தருவாயில் உள்ளது.
தற்போது வரையில் 360 இடங்களில் தொழிலாளர் கட்சி வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சி 81 இடங்களை மட்டுமே வென்றுள்ளது. மற்ற கட்சிகளான ஸ்காட்டிஷ் தேசியவாத கட்சி (SNP) 3 இடங்களிலும், Liberal Democrats 49 இடங்களிலும், சீர்திருத்த UK கட்சியினர் 3 இடங்களிலும் தங்கள் வெற்றியை பதிவு செய்துள்ளனர்.
அந்நாட்டு ஊடகங்கள் நடத்திய தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பின்படி, சுமார் 410 இடங்களை வென்று தொழிலாளர் கட்சி ஆட்சியை பிடிக்கும் என்றும், ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சி 131 இடங்களில் மட்டுமே வெற்றியை பதிவு செய்யும் என்றும் கூறப்பட்டுள்ளது.
ZIMvsIND : இன்று நடைபெற்ற இந்தியா-ஜிம்பாப்வே அணி இடையேயான 2-வது டி20 போட்டியில் இந்திய அணி 100 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. நடைபெற்றுக் கொண்டிருக்கும் இந்தியா, ஜிம்பாப்வே…
மின்தடை : நாளை ( ஜூலை 8/7/2024) எந்தெந்த மாவட்டங்களில் எந்தெந்த இடங்களில் மின்தடை ஏற்படும் என்பதற்கான விவரத்தை பார்க்கலாம். வடக்கு கோவை துடியலூர், வடமதுரை, அப்பநாயக்கன்பாளையம்,…
மணத்தக்காளி கீரை -கசப்பே இல்லாமல் மணத்தக்காளி கீரை செய்வது எப்படி என இப்பதிவில் பார்க்கலாம். தேவையான பொருட்கள்; மணத்தக்காளி கீரை= இரண்டு கைப்பிடி அளவு உளுந்து= ஒரு…
ZIMvIND : தற்போது நிறைவு பெற்ற இந்திய-ஜிம்பாவே அணி இடையேயான முதல் டி20 போட்டியில் ஜிம்பாப்வே அணி இந்திய அணியை வீழ்த்தி தொடரில் 1-0 என முன்னிலையில்…
சென்னை: மத்திய அரசின் புதிய குற்றவியல் சட்டத்திற்கு எதிராக திமுக சார்பில் சென்னையில் நடைபெற்ற உண்ணாவிரத போராட்டத்தில் அமைச்சர் துரைமுருகன் கலந்துகொண்டார். கடந்த ஆட்சியில் நிறைவேற்றம் செய்யப்பட்ட…
சுனில் கவாஸ்கர் : இந்திய அணியின் முன்னாள் வீரரான சுனில் கவாஸ்கர் சூரியகுமார் யாதவின் கேட்ச் சரி தான் என்று சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் கூறி…