கர்நாடகா மாநிலம் பெங்களூரில் இருந்து கடத்தப்பட்ட இரண்டரை வயது பெண் குழந்தை தற்போது தமிழகத்தில் உள்ள களியக்காவிளையில் மீட்டக்கப்பட்டுள்ளனர்.
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்த ஜோசப் ஜான் என்பவர் தனது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் களியக்காவிளை சோதனை சாவடியை கடந்து சென்றுள்ளார். அப்போது அவர்களுடன் இருந்த இரண்டரை வயது பெண் குழந்தை லோகிதா தொடர்ந்து அழுவதை பார்த்த காவல்துறையினர் ஜோசப் ஜான் மற்றும் அவரது மனைவிடம் விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் பெண் குழந்தை தங்களுடையது என்று தெரிவித்துள்ளனர். இதில் சந்தேகம் அடைந்த காவல்துறையினர் அந்த தம்பதியுடன் இருந்த 6 வயது சிறுவனிடம் விசாரணை நடத்தினர். கடந்த 25 தினங்களுக்கு முன்பு பெங்களுருவில் பிச்சை எடுத்துக் கொண்டிருந்தவர்களிடம் இருந்த குழந்தையை ஐஸ்கிரீம் வாங்கி கொடுத்து கடத்தி வந்ததாக அந்த சிறுவன் தெரிவித்துள்ளான். இதை தொடர்ந்து அந்த குழந்தைகளை காப்பகத்தில் ஒப்படைத்த காவல்துறையினர், அந்த தம்பதி மீது வழக்கு பதிவு செய்து அவர்களிடம் தொடர்ந்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
M.G.Ramachandran : என்னுடைய முகத்தை 2 மணி நேரம் யார் பார்ப்பார்கள் என எம்.ஜி.ஆர் கோபப்பட்ட சம்பவம் குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது. நடிகர் எம் ஜி…
NOTA votes: நோட்டா வாக்குகள் அதிகம் பதிவாகும் இடங்களில் அந்த தேர்தலை ரத்து செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு. ஒரு நாட்டின் குடிமகன் வாக்களிப்பது என்பது ஒரு…
Watermelon milk shake- தர்பூசணி மில்க் ஷேக் செய்வது எப்படி என்று இப்பதிவில் காண்போம். நீர் சத்து நிறைந்த தர்ப்பூசணி நம் உடலில் ஏற்படும் நீர் பற்றாக்குறையை…
பானக்கம் -பானகத்தின் ஆரோக்கிய நன்மைகள் மற்றும் செய்முறை பற்றி இப்பதிவில் தெரிந்து கொள்வோம். பானக்கத்தின் நன்மைகள்: பொதுவாக பங்குனி சித்திரை மாதங்களில் தான் நம் ஊர்களில் திருவிழாக்கள்,…
Online Scam : சமூகத்தளத்தில் தோனியின் பெயரை பயன்படுத்தி ரூ.600 வரை மோசடி செய்ய முயற்சி. இன்றைய நாட்களில் வாட்ஸ்ஆப், இன்ஸ்டாகிராம், X தளம் என்ற டிஜிட்டல் தளங்களில்…
Rajat Patidar : ஹைதராபாத் அணிக்கு எதிராக ரஜத் படிதார் ஆட்டம் பற்றி அஜய் ஜடேஜா புகழ்ந்து பேசியுள்ளார். நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணியும்,…