டிக்டாக்கால் நேர்ந்த கொடுமை.! மனைவி, குழைந்தையை தவிக்கவிட்டு தோழியுடன் ஓடிய கணவன்.! நடந்தது என்ன.?

  • கடலூர் மாவட்டத்தில் மனைவி மற்றும் குழந்தையை தனியாக தவிக்கவிட்டு டிக் டாக் தோழியுடன் திருமணம் செய்துகொண்ட கணவர்.
  • திருமணம் செய்துகொண்ட கணவர் மற்றும் அவரது தோழியை, ராஜசேகரின் மனைவியின் புகாரின் பேரில் கடலூர் போலீசார் கைது செய்யப்பட்டனர்.

கடலூர் மாவட்டம் பண்ருட்டியை அடுத்த மேலிருப்பு கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜசேகர். இவருக்கு கீழிருப்பு கிராமத்தைச் சேர்ந்த சுகன்யா என்ற பெண்ணை 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டு, இருவருக்கும் பெண் குழந்தை இருக்கின்றது. ராஜசேகர் மது அருந்திவிட்டு, மனைவியை அடித்து துன்புறுத்தி வந்துள்ளார். இந்த விவகாரம் போலீஸ் வரை சென்று சமாதானமாகினர். பின்னர் டிக்டாக்கில் அதிக ஈர்ப்பு கொண்ட ராஜசேகர், அதில் வீடியோக்களை பதிவு செய்து வந்துள்ளார். நாளடைவில், பல பெண்களுடன் டிக்டாக் வீடியோ வெளியிட்ட தனது கணவரின் போக்கு முற்றிலும் மாறியதாக மனைவி சுகன்யா போலீசில் புகார் அளித்துள்ளார்.

இதனிடையே, கடந்த சில மாதங்களுக்கு முன்பு, வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு வீட்டை விட்டு வெளியேறிய ராஜசேகர் வீடு திரும்பவில்லை. இதனால் குடும்பத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. பின்னர் அதே நேரத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தில் கவிநயா என்ற பெண்ணை காணவில்லை என அவரது உறவினர்கள் அறந்தாங்கி காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். கவிநயாவின் தொலைபேசி அழைப்புகளை ஆய்வு செய்தபோது அவர் அடிக்கடி ராஜசேகருடன் பேசியது தெரியவந்தது. பின்பு கவிநயா மற்றும் ராஜசேகர் ஒன்றாக இணைந்து டிக்டாக்கில் வீடியோ ஒன்று வெளியிட்டுள்ளனர். இதனை பார்த்த போலீசார் இருவரும் திருமணம் செய்துகொண்டு டிக்டாக்கில் வீடியோ வெளியிட்டுள்ளனர் என சுகன்யாவிடம் கூறியுள்ளனர்.

இந்நிலையில், தனது கணவர் ராஜசேகர் ஏற்கனவே பல பெண்களுடன் தொடர்பில் உள்ளதாகவும், பல பெண்களை ஏமாற்றி சீரழித்து வருவதாகவும் சுகன்யா கடலூர் போலீசில் புகார் அளித்தார். அதில் குடும்பங்களை சீரழிக்கும் டிக்டாக் செயலியை உடனடியாக தடை செய்ய வேண்டும் என்று கூறிய சுகன்யா, டிக்டாக் செயலிக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார். அறந்தாங்கி மற்றும் புதுக்கோட்டை போலீசார் ராஜசேகர் மற்றும் கவிநயாவைத் தேடி வந்தனர். புதுக்கோட்டை மாவட்டத்ததில் இருவரும் சுற்றித் திரி்ந்தபோது ரோந்து போலீசாரிடம் சிக்கியுள்ளனர்.

இதுகுறித்து விசாரணையில், ராஜசேகர் தனக்கு திருமணமானதை மறைத்து விட்டதாகவும், இருவரும் காதலித்ததால் திருமணம் செய்ததாகவும் கவிநயா தெரிவித்துள்ளார். இதையடுத்து கவிநயாவின் பெற்றோர் கேட்டுக் கொண்டதற்கு இணங்க அவர்களுடன் அனுப்பி வைத்தனர். சுகன்யா அளித்த புகாரின் பேரில் ராஜசேகர் மீது வழக்குப்பதிவு செய்து அவரைக் கைது செய்துள்ளனர் பண்ருட்டி போலீசார்.

பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Recent Posts

‘செட்டில் ஆகிவிட்டு அடிங்க ..’ ! டி20யின் மாற்றத்தை ஆராயும் ரிக்கி பாண்டிங் !

Ricky Ponting : தற்போது நடைபெறுகிற டி20 கிரிக்கெட் போட்டிகளின் மாற்றங்களை குறித்து ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் பேட்டி ஒன்றில் பகிர்ந்து இருந்தார். ஆஸ்திரேலியா அணியின்…

1 hour ago

நெல்சனின் முதல் தயாரிப்பு.. வித்தியாசமான லுக்கில் கவின்.! கவனம் ஈர்க்கும் ப்ரோமோ வீடியோ!

Bloody Beggar Promo: நெல்சன், கவின் இணையும் படத்தின் ஜாலியான புரொமோ வீடியோவும், முதல் பார்வையும் இணையத்தை கலக்கிய வருகிறது. நடிகர் கவின் தற்போது ஸ்டார் படத்தில்…

1 hour ago

இந்தியாவை பின்னுக்கு தள்ளிய பேட் கம்மின்ஸ் ! ஐசிசி தரவரிசையில் ஆஸி. கிரிக்கெட் அணி நம்பர் 1 !!

ICC Ranking  : ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் இந்திய அணியை பின்னுக்கு தள்ளி ஆஸ்திரேலியா அணி நம்பர் 1 இடத்தில் முன்னேறி உள்ளது. ஐசிசி, தங்களது டெஸ்ட்…

2 hours ago

20 முறை ராகுல் காந்தியை முன்னிறுத்தி காங்கிரஸ் தோல்வி.! அமித்ஷா கடும் விமர்சனம்.!

Election Campaign : சோனியா காந்தி 20 முறை ராகுல் காந்தியை முன்னிறுத்தி தோல்வியடைந்துள்ளார் என அமித்ஷா விமர்சித்துள்ளார். இரண்டு கட்ட மக்களவை தேர்தல் நிறைவடைந்துள்ள நிலையில்,…

2 hours ago

வேட்டையன் படப்பிடிப்பில் கோட் சூட்டில் கலக்கும் சூப்பர் ஸ்டார்கள்! வைரல் க்ளிக்ஸ்…

Vettaiyan : ரஜினி, அமிதாப் பஜன் ஆகியோரின் வேட்டையன் படப்பிடிப்பு புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. இயக்குனர் டிஜே ஞானவேல் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும்…

2 hours ago

விஜய் மகன் இயக்கும் படத்தில் நடிக்கிறீங்களா? கவின் சொன்ன பதில்!!

Kavin : விஜய் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கும் படத்தில் தான் நடிக்கிறேனா இல்லையா என்பதற்க்கு கவின் விளக்கம் அளித்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளர்ந்து…

2 hours ago