இன்றைய நாளின் (19.05.2022) ராசி பலன்கள்..! இன்று இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம் தான்..!

மேஷம்: இன்று மந்தமான நாளாக அமையும். உத்தியோகத்தில் ஒரு சில பயணங்கள் ஏற்படலாம். உங்கள் துணையுடன் அனுசரித்து நடந்து கொள்ளுங்கள். பொறுப்புகள் அதிகரித்து இருப்பதால் செலவுகள் கூடுதலாக இருக்கும். தலைவலி ஏற்படலாம்.

ரிஷபம்: இன்று நம்பிக்கையுடன் செயல்பட்டால் வெற்றி நிச்சயம். நீங்கள் உத்தியோகத்தில் திட்டமிட்டு செயல்பட்டால் வெற்றி பெறலாம். உங்கள் துணையுடன் அன்பு குறைந்து பேசுவது போல் இருக்கும். அதனால் அன்பாக நடந்து கொள்ளுங்கள். பணவரவு குறைவாக இருக்கும். கண் எரிச்சல் இருக்கும்.

மிதுனம்: இன்று நீங்கள் உங்களின் சுய வளர்ச்சிக்கு உங்களை தயார் செய்வீர்கள். உத்தியோகத்தில் பணிகளை மும்முரமாக செய்து முடிப்பீர்கள். உங்கள் துணையை நன்கு புரிந்துகொள்வதன் மூலம் நாளை சிறப்பாக்கலாம். இன்று பணவரவு அதிகமாக ஏற்படும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்க வாய்ப்புள்ளது.

கடகம்: இன்று நீங்கள் முக்கிய முடிவுகளை எடுக்க மிகச்சரியான நாள். மேலும் பணியிடத்தில் புதிய வாய்ப்புகள் வரும். உங்கள் துணையிடம் நேர்மையாக நடந்து கொள்வீர்கள். இன்று பணவரவு அதிகமாக இருக்கும். ஆரோக்கிய பாதிப்பு எதுவும் ஏற்படாது.

சிம்மம்: இன்று அனைத்தையும் லேசாக எடுத்துக்கொள்வது நல்ல பலன்களை கொடுக்கும். உத்தியோகத்தில் பரபரப்பாக இருக்க நேரும். கவனமாக பணிகளை செய்து முடிக்க வேண்டும். உங்கள் துணையிடம் அகந்தை உணர்வை வெளிப்படுத்துவீர்கள். பண செலவு ஏற்படலாம். முதுகு வலி ஏற்படலாம்.

கன்னி: இன்று கடவுள் வழிபாடு மேற்கொள்ளுங்கள். முக்கிய முடிவுகளை இன்று எடுக்க வேண்டாம். உத்தியோகத்தில் கவனமாக வேலைகளை செய்ய வேண்டும். உங்கள் துணையிடம் வாக்குவாதம் ஏற்படுவதை தவிர்க்க வேண்டும். இன்று பணவரவு குறைவாக இருக்கும். தலைவலி ஏற்படும்.

துலாம்: இன்று நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகளில் வெற்றி நிச்சயம். மேலும் பணியிடத்தில் சாதகமான பலன்கள் உண்டு. உங்கள் துணையிடம் அன்பாக நடந்து கொள்வீர்கள். இன்று பணவரவு அதிகமாக இருக்கும். ஆரோக்கியம் இன்று சிறப்பாக இருக்கும்.

விருச்சிகம்: இன்றைய நாள் உங்களுக்கு மிக அனுகூலமான நாளாக இருக்கும். உத்தியோகத்தில் நீங்கள் மேற்கொள்ளும் அனைத்திலும் வெற்றி கிட்டும். உங்கள் துணையிடம் அன்பாகவும் அக்கறையுடனும் இருப்பீர்கள். நிதி நிலைமை சிறப்பாக இருக்கும். மகிழ்ச்சி காரணமாக உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

தனுசு: இன்று உங்களுக்கு சிறப்பான நாளாக அமைய ஆன்மீகத்தில் ஈடுபடுங்கள். உத்தியோகத்தில் பணிகளை கவனமுடன் செய்ய வேண்டும். உங்கள் துணையுடன் கருத்து வேறுபாடு ஏற்படலாம். பணவரவு குறைந்த அளவு இருக்கும். பதட்டமாக இருப்பீர்கள்.

மகரம்: இன்று உங்களுக்கு உற்சாகமான நாளாக இருக்கும். உத்தியோகத்தில் உங்களுக்கு சாதகமான சூழ்நிலை அமையாது. துணையிடம் எல்லா விஷயங்களிலும் தீவிரமாக எடுத்து கொள்ள வேண்டாம். பணசெலவு அதிகமாக இருக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்காது.

கும்பம்: இன்று உங்கள் விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும். உத்தியோகத்தில் பாராட்டு பெறுவீர்கள். உங்கள் துணையுடன் அன்பாக இருப்பீர்கள். இன்று உங்களுக்கு பணவரவு அதிகமாக ஏற்படும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

மீனம்: இன்று உங்களுக்கு சிறப்பான நாளாக இருக்கும். முக்கிய முடிவுகளை இன்று நீங்கள் எடுக்கலாம். உத்தியோகத்தில் சிறப்பாக பணிகளை செய்து முடிப்பீர்கள். உங்கள் துணையிடம் அன்பாக நடந்து கொள்வீர்கள். பணவரவு அதிகமாக காணப்படும். ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.

Recent Posts

கொளுத்தும் வெயிலுக்கு இதமாக தர்பூசணி மில்க் ஷேக் செய்வது எப்படி ?

Watermelon milk shake-  தர்பூசணி மில்க் ஷேக் செய்வது எப்படி என்று இப்பதிவில் காண்போம். நீர் சத்து நிறைந்த தர்ப்பூசணி நம் உடலில் ஏற்படும் நீர் பற்றாக்குறையை…

14 mins ago

பாரம்பரியமிக்க பானக்கத்தின் ஆச்சரியமூட்டும் நன்மைகளை தெரிஞ்சுக்கோங்க.!

பானக்கம் -பானகத்தின் ஆரோக்கிய நன்மைகள் மற்றும் செய்முறை பற்றி இப்பதிவில் தெரிந்து கொள்வோம். பானக்கத்தின் நன்மைகள்: பொதுவாக பங்குனி சித்திரை மாதங்களில் தான்  நம் ஊர்களில் திருவிழாக்கள்,…

1 hour ago

‘ஹாய் காய்ஸ் நான் உங்கள் தோனி’ .. தோனி பெயரில் மோசடி செய்ய முயற்சி!

Online Scam : சமூகத்தளத்தில் தோனியின் பெயரை பயன்படுத்தி ரூ.600 வரை மோசடி செய்ய முயற்சி. இன்றைய நாட்களில் வாட்ஸ்ஆப், இன்ஸ்டாகிராம், X  தளம் என்ற டிஜிட்டல் தளங்களில்…

1 hour ago

இந்த அடி பத்தாது கண்ணா! ரஜத் படிதாருக்கு அட்வைஸ் செய்த அஜய் ஜடேஜா!

Rajat Patidar : ஹைதராபாத் அணிக்கு எதிராக ரஜத் படிதார்  ஆட்டம் பற்றி அஜய் ஜடேஜா புகழ்ந்து பேசியுள்ளார். நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணியும்,…

2 hours ago

புதுச்சேரியில் ஜூன் 6 பள்ளிகள் திறப்பு…தமிழகத்தில் எப்போது.? குழப்பத்தில் மாணவர்கள்.!

Schools Reopen: புதுச்சேரி மாநிலத்தில் ஜுன் 6ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என  அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் வரும் 29-ம் தேதி முதல்,…

2 hours ago

தெலுங்கானாவில் 11,12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு.! 7 மாணவர்கள் தற்கொலை.!

Student Suicide : தெலுங்கானாவில் பள்ளி தேர்வில் தோல்வியடைந்ததால் இதுவரை 7 மாணவ மாணவிகள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். தெலுங்கானா பள்ளி கல்வி வாரியம் நடத்தும் 11 மற்றும்…

2 hours ago