பொருநை நாகரீகம் தான் இந்தியாவில் இந்தியாவின் முதல் நாகரீகம்.! சபாநாயகர் அப்பாவு தகவல்.!

பொருநை நாகரீகம் தான் இந்தியாவில் இந்தியாவின் முதல் நாகரீகம் என சபாநாயகர் அப்பாவுதெரிவித்துள்ளார்.  

திருநெல்வேலி மாவட்டத்தில் தொல்லியல் சார்பாக அமைக்கப்பட உள்ள பொருநை அருங்காட்சியகத்திற்கு இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமை செயலகத்தில் காணொளி வாயிலாக அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.

இந்த பொருநை அருங்காட்சியகம் குறித்து சபாநாயகர் அப்பாவு செய்தியாளர்கள் மத்தியில் கூறுகையில்,  பொருநை நாகரீகம் என்பது, பொதிகை மலையில் தோன்றும் தாமிரபரணி ஆற்றின் மூலம் பயன்பெரும் திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய மாவட்டங்களில், ஆதிச்சநல்லூர், சிவகளை, கொற்கை ஆகிய இடங்களில் தொல்லியல் துறையினர் ஆராய்ச்சியின் மூலம் கிடைத்த பொருட்கள் இந்த அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்ட உள்ளன.

பொருநை அருங்காட்சியகமானது, 33 கோடி செலவில் கட்டமைக்கப்பட உள்ளது. சிவகளையில் கிடைத்த பொருட்கள் தனி கட்டத்திலும், கொற்கைக்கு தனி கட்டடம் எனவும், ஆதிச்சநல்லூர் பகுதிக்கு தனி கட்டடமும் , நிர்வாகத்துக்கு தனி கட்டடம் என அமைக்கப்படவுள்ளது என்றும்,

இந்த அருங்காட்சியக வளாகத்தில் சிற்றுண்டிகள் பகுதி, வாகனங்கள் நிறுத்துமிடம், மகளிர் சுய உதவி குழுக்கள் மூலம் தயாரிக்கப்பட்ட  பொருட்களுக்கான விற்பனை இடம் என அமைக்கப்பட உள்ளது. 18 மாதங்களில் இந்த பணிகள் நிறைவடைய உள்ளது.

மேலும், அருகாட்சியாக வளாகத்திற்கு நிறைய இடங்கள் உள்ளதால், கலைஞர் நூலகம் அமைக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளோம் சபாநாயகர் அப்பாவு குறிப்பிட்டார். மேலும், பொருநை நாகரீகம் தான் இந்தியாவிலேயே முதலில் தோன்றிய நாகரீகம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியதை குறிப்பிட்டார்.

இந்த தகவலை முதல்வர் குறிப்பேடுகளை பார்த்து கூறவில்லை என்றும், சிவகளையில் கிடைக்கப்பட்ட அந்தக்காலத்து மக்கள் பயன்படுத்திய தாலி, நெல் ஆகியவை கிடைக்கப்ட்டன. அதனை, அமெரிக்க ஃபுளோரிடா ஆய்வகத்திற்கு அனுப்பி வைத்து, அங்கு அந்த தாலியானது கிருஸ்து பிறப்பதற்கு முன்னர் 150 முன்பு மக்களால் பயன்படுத்தப்பட்டது என அறிவியல் பூர்வமாக ஆய்வு செய்து கண்டறியப்பட்டு தான் இந்தியாவிலேயே முதலில் தோன்றிய நாகரீகம் பொருநை நாகரீகம் என குறிப்பிட்டு பேசினார் முதல்வர் என சபாநாயகர் அப்பாவு நெல்லையில் செய்தியாளர்கள் மத்தியில் தெரிவித்தார்.

மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Recent Posts

ஐபிஎல் திருவிழாவின் இன்றைய போட்டி ..! மும்பையுடன் பலப்பரீட்சை நடத்தும் கொல்கத்தா !!

ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியாக மும்பை அணியும், கொல்கத்தா அணியும் மோதுகிறது. நடைபெற்று வரும் இந்த ஐபிஎல் தொடரில் இன்றைய 50-வது போட்டியாக…

1 hour ago

அட்சய திருதியை 2024 ல் எப்போது? தங்கம் வாங்குவதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க.!

அட்சய திருதியை 2024-அட்சய திருதியையின் சிறப்புகள் மற்றும் இந்த ஆண்டுக்கான தேதி எப்போது என தெரிந்து கொள்வோம். அட்சய திருதியை 2024: இந்த ஆண்டு மே மாதம்…

2 hours ago

IPL2024: ராஜஸ்தானை வீழ்த்தி ஹைதராபாத் திரில் வெற்றி..!

IPL2024:ராஜஸ்தான் அணி 20 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து 200 ரன்கள் எடுத்தனர். இதனால் ஹைதராபாத் அணி 1 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில்…

9 hours ago

ஆந்திராவில் 2,000 ஆயிரம் கோடி ரூபாயுடன் சிக்கிய 4 கண்டெய்னர்கள்.!

Andhra pradesh: ஆந்திராவில் ரூ.2,000 கோடி பணத்துடன் சென்ற 4 கண்டெய்னர்கள் பிடிபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆந்திராவில் மே 13ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளதால் பறக்கும்…

14 hours ago

என்னதான் ஆச்சு .. ?அறிவித்தவுடன் சொதப்பும் இந்திய வீரர்கள்… கவலையில் ரசிகர்கள் !

Indian Team : டி20 அணியை அறிவித்த பிறகு இந்திய அணியில் இடம்பெற்றுள்ள சில வீரர்கள் அடுத்தடுத்து ஐபிஎல் போட்டியில் சொதப்பி வருவதால், ரசிகர்கள் கவலையில் இருக்கின்றனர். வருகிற…

14 hours ago

கிருஷ்ணரின் சாதனையை முறியடிக்க பிரஜ்வல் முயற்சி.? காங்கிரஸ் அமைச்சரின் சர்ச்சை கருத்து.!

Prajwal Revanna : கிருஷ்ணரின் சாதனையை முறியடிக்க பிரஜ்வல் ரேவண்ணா முயற்சித்துள்ளார் என கர்நாடகா காங்கிரஸ் அமைச்சர் சர்ச்சையாக கருத்து தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலம் ஹாசன் தொகுதி…

14 hours ago