தமிழகம் மற்றும் கேரள எல்லைப் பகுதியில் மாவோயிஸ்டுகள் நடமாட்டம் உள்ளதாக கூறப்படுகிறது. மாவோயிஸ்டுகள் தேடுதல் வேட்டையில் தமிழகம் மற்றும் கேரளா காவல்துறை ஈடுபட்டு வருகின்றனர். மலைப்பகுதியில் வசிக்கும் மக்களை மாவோயிஸ்டுகள் மூளை சலவை செய்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் அண்மையில் மத்திய உளவுத்துறை இந்தியாவில் பாலக்காடு , வயநாடு உள்ளிட்ட மாவட்டங்களில் மாவோயிஸ்டுகளால் ஆபத்து உள்ளதாக எச்சரிக்கை விடுத்தது. இதை தொடர்ந்து கேரளாவில் மாவோயிஸ்டுகளை வேட்டையாட தண்டர்போல்ட் அதிரடிப்படையினர் ஈடுபட்டனர்.
இந்நிலையில் பாலக்காடு மாவட்டம் மஞ்சகட்டி மலைப்பகுதியில் மாவோயிஸ்டுகள் இருப்பதாக கேரளா தண்டர்போல்ட் அதிரடிப்படையினருக்கு தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து 50-க்கும் மேற்பட்ட தண்டர்போல்ட் போலீசார் அவர்களை சுற்றி வளைத்தனர்.
இதை அறிந்து அவர்கள் அங்கிருந்து தப்பிக்க காவல் துறையை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே ஒரு மணி நேரத்திற்கு மேல் துப்பாக்கி சண்டை நடந்தது. இதில் மூன்று மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டதாக காவல்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது.
ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியில் பெங்களூரு அணியும், குஜராத் அணியும் மோதுகிறது. நடைபெற்று வரும் இந்த ஐபிஎல் தொடரில் இன்றைய 51-வது போட்டியில்…
IPL2024: மும்பை அணி 18.5 ஓவரில் அனைத்து விக்கெட்டைகள் இழந்து 145 ரன்கள் எடுத்தனர். இதனால் கொல்கத்தா அணி 24 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில்…
Ricky Ponting : தற்போது நடைபெறுகிற டி20 கிரிக்கெட் போட்டிகளின் மாற்றங்களை குறித்து ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் பேட்டி ஒன்றில் பகிர்ந்து இருந்தார். ஆஸ்திரேலியா அணியின்…
Bloody Beggar Promo: நெல்சன், கவின் இணையும் படத்தின் ஜாலியான புரொமோ வீடியோவும், முதல் பார்வையும் இணையத்தை கலக்கிய வருகிறது. நடிகர் கவின் தற்போது ஸ்டார் படத்தில்…
ICC Ranking : ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் இந்திய அணியை பின்னுக்கு தள்ளி ஆஸ்திரேலியா அணி நம்பர் 1 இடத்தில் முன்னேறி உள்ளது. ஐசிசி, தங்களது டெஸ்ட்…
Election Campaign : சோனியா காந்தி 20 முறை ராகுல் காந்தியை முன்னிறுத்தி தோல்வியடைந்துள்ளார் என அமித்ஷா விமர்சித்துள்ளார். இரண்டு கட்ட மக்களவை தேர்தல் நிறைவடைந்துள்ள நிலையில்,…