Categories: IranMiddle East News

சட்டபூர்வமான கருக்கலைப்புக்கு அனுமதி அளித்த மூன்று நாடுகள்!இங்கே தெரிந்து கொள்ளுங்கள்!

கருக்கலைப்பு என்பது ஒரு பெண்ணின் தனிப்பட்ட உரிமை மற்றும் அரசியலமைப்பு உரிமை என்று 1973-ஆம் ஆண்டு தீர்ப்பளித்த மைல்கல் ரோ வெர்சஸ் வேட் முடிவை ரத்து செய்ய உச்ச நீதிமன்றம் வரைவு அறிக்கை தயார் செய்து வருவதாக கூறப்படும் ஆவணம் ஒன்று நேற்று அமெரிக்காவில் கசிந்தது.இது அமெரிக்க பெண்கள் மற்றும் சமூகநலச் ஆர்வலர்கள் மத்தியில் பெரும் கோபத்தை தூண்டியது.இதனால்,பலரும் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.

இந்தச் செய்தி அமெரிக்க கருக்கலைப்புச் சட்டங்களை மத்திய கிழக்கில் உள்ள சட்டங்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கத் தூண்டியது.அந்த வகையில், கர்ப்பமானது தாயின் ஆரோக்கியத்திற்கு ஆபத்து அல்லது கருவில் அசாதாரணம் இல்லாவிட்டாலும் கூட வட ஆப்பிரிக்காவிலும் கருக்கலைப்பு சட்டவிரோதமானது.இருப்பினும்,கருக்கலைப்பு அனுமதிக்கப்படும் மூன்று நாடுகள் இங்கே.

இஸ்ரேல்:

இஸ்ரேலில் கருக்கலைப்பு சில சமயங்களில் சட்டபூர்வமானதாக இருந்தாலும் குறிப்பிடத்தக்க அளவில் கட்டுப்படுத்தப்படுகிறது.அந்த வகையில் இஸ்ரேலில் கருக்கலைப்பு செய்ய விரும்பும் பெண்கள் “கர்ப்பத்தை நிறுத்தும் வாரியத்தின்” அனுமதியை முதலில் பெற வேண்டும்.

மேலும்,இஸ்ரேலிய சுகாதார அமைச்சகத்தின்படி, பின்வரும் நிபந்தனைகளில் ஒன்றையாவது பூர்த்தி செய்து கருக்கலைப்பு நடைபெற வேண்டும்.அதன்படி,

  • பெண்ணின் வயது 18 அல்லது 40-க்கு மேல் இருக்க வேண்டும்.
  • கற்பழிப்பு அல்லது பாலுறவு போன்ற சட்டவிரோத உடலுறவின் விளைவாக ஏற்படும் கர்ப்பத்தை கலைக்கலாம்.
  • கர்ப்பம் தாயின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் அல்லது உடல் அல்லது உளவியல் பாதிப்பை ஏற்படுத்தும்போது கருக்கலைப்புக்கு அனுமதி.
  • தாய் திருமணமாகவில்லை அல்லது கருவில் உடல் அல்லது மன குறைபாடு இருந்தால் அனுமதி.

அதே சமயம்,கருக்கலைப்பு தொடர்பான முடிவெடுக்கும் அதிகாரத்தை பெண்களுக்கு அதிக அளவில் அளிக்கும் சீர்திருத்தங்களுக்கு இடதுசாரி மெரெட்ஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சமீபத்தில் வலியுறுத்தினர். ஆனால்,சில மதவாத பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்த முயற்சிகளுக்கு எதிராக குரல் கொடுத்துள்ளனர் என்று ஜனவரி மாதம் தி டைம்ஸ் ஆஃப் இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

துருக்கி:

கர்ப்பம் தரித்த முதல் 10 வாரங்கள் வரை தடையின்றி கருக்கலைப்பு செய்ய துருக்கியில் சட்டப்பூர்வமான அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. கர்ப்பம் தாய்க்கு ஆபத்து அல்லது கருவில் அசாதாரணம் இருந்தால் கருக்கலைப்பு சாத்தியமாகும்.இதுபோன்ற சந்தர்ப்பங்களில் செய்யப்படும் கருக்கலைப்புகளை சுகாதார அதிகாரிகளிடம் தெரிவிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

இதனிடையே,கடத்த 2020 ஆம் ஆண்டில்,துருக்கிய செய்தி நிறுவனமான Duvar, பெரும்பாலான பொது மருத்துவமனைகள் பெண்களின் கோரிக்கைகளைப் பொருட்படுத்தாமல் கருக்கலைப்பு செய்வதில்லை என்று தெரிவித்தது.அதே சமயம்,ஒரு சில தனியார் மருத்துவமனைகள் மட்டுமே கருக்கலைப்பு செய்கின்றன என்று கூறப்படுகின்றன.

துனிசியா:

துனிசியாவில் முதல் மூன்று மாதங்கள் முடியும் வரை கருக்கலைப்பு செய்ய சட்டப்பூர்வ அனுமதி வழங்கப்பட்டுள்ளது.மேலும்,கருவின் அசாதாரணங்கள் அல்லது தாயின் ஆரோக்கியத்திற்கு ஆபத்து ஏற்பட்டால் முதல் மூன்று மாதங்களுக்குப் பிறகும் கருக்கலைப்பு செய்ய அனுமதிக்க உண்டு.இதற்காக,நாடு முழுவதும் பொது “குடும்பக் கட்டுப்பாடு மையங்கள்” உள்ளன.

அதைப்போல,ஈரானில் பல ஆண்டுகளாக, கர்ப்பம் பெண்ணின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் அல்லது கருவில் கடுமையான குறைபாடுகள் இருப்பதாக மூன்று மருத்துவர்கள் ஒப்புக்கொண்டால் மட்டுமே கருக்கலைப்பு சட்டப்பூர்வமாக இருந்தது.

இந்த வேளையில்,நவம்பர் 2021 சட்டம் இந்த அமைப்பை ஒரு நீதிபதி மற்றும் இரண்டு மருத்துவ நிபுணர்கள் கொண்ட குழுவாக மாற்றியது. இதன்மூலம்,அரசு ஊடகங்கள் கருக்கலைப்பைக் கண்டிக்க வேண்டும் எனவும் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் சட்டவிரோத கருக்கலைப்புகளை அடையாளம் காண வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.இதன் நோக்கம்,கருக்கலைப்பை குறைத்து ஈரானின் மக்கள்தொகையை உயர்த்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்று கூறப்படுகிறது.

Recent Posts

IPL2024: வரலாறு சாதனை… சிக்ஸர் மழையால் பஞ்சாப் அபார வெற்றி..!

IPL2024: பஞ்சாப் அணி 18.4 ஓவரில் 2 விக்கெட்டைகள் இருந்து 262 ரன்கள் எடுத்தனர். இதனால் பஞ்சாப் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றனர். இன்றைய போட்டியில்…

46 mins ago

‘இந்த விதியை சேர்த்தது .. ரொம்பவே முக்கியம் தான்’ !!சிஎஸ்கே அணியின் கான்வே ஓபன் டாக் !!

Devon Conway : நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் இந்த விதி நல்லது தான் என ஆதரித்துள்ளார் சிஎஸ்கே அணியின் வீரரான டேவான் கான்வே. ஐபிஎல் தொடரின்…

4 hours ago

பேட் ரூம் காட்சியில் படு கிளாமராக நடித்த பிரியா ஆனந்த்! அதுவும் அந்த புது படத்திலா?

Priya Anand : நடிகை பிரியா ஆனந்த்  படுகிளாமராக நடித்து இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் படங்களில் நடித்து முன்னணி நடிகையாக…

4 hours ago

காமெடி வேற லெவல்! சிரிக்க வைக்கும் ‘இங்க நான் தான் கிங்கு’ டிரைலர்!

Inga Naan Thaan Kingu : சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள இங்க நான் தான் கிங்கு படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. வடக்குப்பட்டி ராமசாமி படத்தின் வெற்றியை தொடர்ந்து…

5 hours ago

பட்ஜெட் விலையில் அசத்தல் 5G ஸ்மார்ட்போன் !! ரயில்மி சி 65யின் அம்சம், விலை விவரம் இதோ !!

Realme C65 5G : ரியல்மி நிறுவனம் தனது அடுத்த 5ஜி ஸ்மார்ட் போனான ரியல்மி சி65 5ஜி வெளியிட்டது. ரியல்மி நிறுவனம் இந்த ஆண்டில் அடுத்தடுத்து…

5 hours ago

அதிர்ச்சி ரிப்போர்ட்.! 75% பேர் போலியான DeepFake வீடியோக்களை பார்த்துள்ளனராம்..!

DeepFake : 75 சதவீத இந்தியர்கள் போலியான டீப்ஃபேக் வீடியோக்களை பார்த்துள்ளனர் என ஓர் ஆய்வறிக்கை வெளியாகியுள்ளது. தொழில்நுட்ப உலகில் அதிவேகமாக வளர்ந்து வரும் AI எனும்…

5 hours ago