இந்த செடியை சாதாரணமா நெனச்சீராதீங்க….!

எருக்கச் செடி நம் அனைவருக்கும் தெரிந்த ஒரு செடி தான். இந்த செடி சாதாரணமாக சாலை ஓரங்களிலும், வெளி ஓரங்களிலும் வளரக் கூடிய ஒரு செடி.

எருக்கச் செடியின் பூக்களை வைத்து நமது சிறு வயதில் விளையாடுவதுண்டு. விளையாட்டிற்காக பயன்படுத்திய இந்த செடியில் உள்ள மறுத்து குணங்கள் பற்றி சிலர் மட்டுமே அறிந்திருக்க வாய்ப்புள்ளது.

இந்த செடியின் அனைத்து பாகங்களும் மருந்தாக பயன்படுகிறது. தற்போது இந்த பதிவில் எருக்கச் செடியின் மருத்துவ குணங்கள் பற்றி பார்ப்போம்.

இருமல்

இருமல் மற்றும் ஆஸ்துமா பிரச்சனை உள்ளவர்களுக்கு இந்த செடியின் இலை ஒரு சிறந்த மருந்தாக பயன்படுகிறது. இந்த பிரச்சனை உள்ளவர்கள் எருக்கச் செடியின் இலையை பறித்து காய வைக்க வேண்டும்.

காய வைத்த எருக்க இலையை எரித்து அதிலிருந்து வரும் புகை சுவாசித்தால் இருமல் மற்றும் ஆஸ்துமா போன்ற பிரச்சனைகளை நீக்கி குணமாக்கும்.

நெஞ்சு மற்றும் வயிற்று வலி

ஒரு வயதிற்கு மேல் படிப்படியாக நோய்கள் உருவாகிறது. அதில் நெஞ்சு வலி பலருக்கு ஏற்படுகிறது. சில வேளையில் இந்த நெஞ்சு வலி அதிகமான வேலை பளுவினாலும் ஏற்படுகிறது. நெஞ்சு வலி மற்றும் வயிற்று வலியை போக்க எருக்கச் செடி ஒரு சிறந்த மருந்தாகும்.

இருக்க செடியின் இலைகளை மூட்டை கட்டி, சூடாக்கி, வெதுவெதுப்பாக நெஞ்சு மற்றும் வயிற்று பகுதிகளில் வலி உள்ள இடங்களில் ஒத்தடம் கொடுத்தால் வலி நீங்கி விடும்.

புண்கள்

எருக்கச் செடியின் இலைகளை நன்கு காய வைத்து, அதை பொடித்து, புண் உள்ள இடத்தில் தடவினால் புண் விரைவில் ஆறும்.

சொறி சிரங்கு

சொறி சிரங்கு உள்ளவர்களுக்கு எருக்கச் செடியின் இலைச்சாறு நல்ல மருந்தாகும். எருக்கச் செடியின் இலைச்சாறுடன், மஞ்சள் தூள் கலந்து, கடுகு எண்ணெயில் வேக வைத்து, அதை தோலில் ஏற்படும், படை சிரங்கு போன்றவற்றிற்கு தடவினால் இதில் இருந்து விடுதலை பெறலாம்.

பாம்பு விஷம்

பாம்பு கடித்தவர்கள் உடனடியாக எருக்கன் பூ மொட்டு 5 எடுத்து அதனை வெற்றிலையில் வைத்து நன்றாக மென்று சாப்பிட வேண்டும்.இதனை சாப்பிட்ட உடன் விஷம் இறங்கி விடும்.

குதிங்கால் வீக்கம்

குதிங்கால் வீக்கம் உள்ளவர்கள் எருக்க இலையில், பழுத்த இலையை எடுத்து, குதிங்கால் வீக்கத்தின் மீது வைத்து, சுட்ட செங்கல்லை அதன் மீது வைத்து, ஒத்தடம் கொடுத்து வர வீக்கம் சரியாகும்.

லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Recent Posts

ஐபிஎல் திருவிழாவின் இன்றைய போட்டி ..! மும்பையுடன் பலப்பரீட்சை நடத்தும் கொல்கத்தா !!

ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியாக மும்பை அணியும், கொல்கத்தா அணியும் மோதுகிறது. நடைபெற்று வரும் இந்த ஐபிஎல் தொடரில் இன்றைய 50-வது போட்டியாக…

2 hours ago

அட்சய திருதியை 2024 ல் எப்போது? தங்கம் வாங்குவதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க.!

அட்சய திருதியை 2024-அட்சய திருதியையின் சிறப்புகள் மற்றும் இந்த ஆண்டுக்கான தேதி எப்போது என தெரிந்து கொள்வோம். அட்சய திருதியை 2024: இந்த ஆண்டு மே மாதம்…

3 hours ago

IPL2024: ராஜஸ்தானை வீழ்த்தி ஹைதராபாத் திரில் வெற்றி..!

IPL2024:ராஜஸ்தான் அணி 20 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து 200 ரன்கள் எடுத்தனர். இதனால் ஹைதராபாத் அணி 1 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில்…

9 hours ago

ஆந்திராவில் 2,000 ஆயிரம் கோடி ரூபாயுடன் சிக்கிய 4 கண்டெய்னர்கள்.!

Andhra pradesh: ஆந்திராவில் ரூ.2,000 கோடி பணத்துடன் சென்ற 4 கண்டெய்னர்கள் பிடிபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆந்திராவில் மே 13ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளதால் பறக்கும்…

15 hours ago

என்னதான் ஆச்சு .. ?அறிவித்தவுடன் சொதப்பும் இந்திய வீரர்கள்… கவலையில் ரசிகர்கள் !

Indian Team : டி20 அணியை அறிவித்த பிறகு இந்திய அணியில் இடம்பெற்றுள்ள சில வீரர்கள் அடுத்தடுத்து ஐபிஎல் போட்டியில் சொதப்பி வருவதால், ரசிகர்கள் கவலையில் இருக்கின்றனர். வருகிற…

15 hours ago

கிருஷ்ணரின் சாதனையை முறியடிக்க பிரஜ்வல் முயற்சி.? காங்கிரஸ் அமைச்சரின் சர்ச்சை கருத்து.!

Prajwal Revanna : கிருஷ்ணரின் சாதனையை முறியடிக்க பிரஜ்வல் ரேவண்ணா முயற்சித்துள்ளார் என கர்நாடகா காங்கிரஸ் அமைச்சர் சர்ச்சையாக கருத்து தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலம் ஹாசன் தொகுதி…

15 hours ago