உலகத்திலேயே திரையரங்கிற்கு செல்ல தடுப்பூசி கேட்பது இங்குதான் முதல்முறை… அவனவன் சுதந்திரத்தில் தலையிடுவது எவ்வளவு பெரிய மனித உரிமை மீறல்? என இயக்குனர் சுரேஷ் காமாட்சி ட்வீட்.
தமிழகத்தில் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மெகா தடுப்பூசி முகாம் மற்றும் வீடு தேடி தடுப்பூசி போடும் திட்டம் மூலம் தடுப்பூசி போடும் பணிகளை தீவிரப்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு மட்டுமே பொது இடங்களில் அனுமதி அளிக்கப்படும் என்று, தமிழக பொது சுகாதார திட்டத்தில் திருத்தம் செய்ய ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி, தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளார்களா என பள்ளி, கல்லூரி, கடைகள் மற்றும் சந்தைகள் உள்ளிட்ட பொது இடங்களில் சம்பந்தப்பட்ட ஊழியர்கள் உறுதி செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதேபோல், திரையரங்குகள், பூங்காக்கள், மக்கள் கூடும் இடங்களில் மக்கள் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளார்களா என சுகாதார அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இதுகுறித்து இயக்குனர் சுரேஷ் காமாட்சி அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘உலகத்திலேயே திரையரங்கிற்கு செல்ல தடுப்பூசி கேட்பது இங்குதான் முதல்முறை… அவனவன் சுதந்திரத்தில் தலையிடுவது எவ்வளவு பெரிய மனித உரிமை மீறல்?? முன்பு போலவே திரையரங்கிற்குள் மக்களை அனுமதிக்க வேண்டும்!’ என பதிவிட்டுள்ளார்.
BCCI : டி20 உலகக்கோப்பைக்கான பிசிசிஐ அறிவித்துள்ள இந்திய அணியை ரசிகர்கள் இணையத்தில் விமர்சித்து வருகின்றனர். ஐபிஎல் தொடர் நடைபெற்று வரும் நிலையில் தற்போது டி20 உலகக்கோப்பை…
Israel : தெற்கு காசாவில் இஸ்ரேல் தாக்குதல் தொடரும் என அந்நாட்டு பிரதமர் நெதன்யாகு திட்டவட்டமாக தெரிவித்தார். இஸ்ரேலுக்கு எதிரான ஹமாஸ் அமைப்பினரை முழுதும் அழிக்கும் வரையில்…
Gp Muthu : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து விலகியது பற்றி ஜிபி முத்து பேசியுள்ளார். குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சி பெரிய…
T20 World Cup 2024: டி20 உலக கோப்பை தொடருக்காக ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்தது. ஐபிஎல் தொடர் முடிந்த உடனே டி20 உலகக்கோப்பை…
Bird Flu : இந்தியாவில் பரவும் பறவை காய்ச்சல் தொடர்பாக இந்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளது. நமது நாட்டில் மட்டும்மல்லாது உலகில் ஒரு சில நாடுகளில்…
Nirmala Devi: கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்த முயன்ற வழக்கில் நிர்மலா தேவிக்க்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. கடந்த 2018ம் ஆண்டு விருதுநகர் மாவட்டம்…