விளையாட்டு

இந்த ஜெர்ஸி எண்களுக்கு ஓய்வை அறிவிக்க வேண்டும்…! பிசிசிஐக்கு சுரேஷ் ரெய்னா கோரிக்கை..!

சுரேஷ் ரெய்னா :  இந்திய அணியின் கிரிக்கெட் ஜெர்ஸி எண் ‘7’ -க்கு பிசிசிஐ ஓய்வை அறிவித்தனர், அதே போல ’45’& ’18’ என்ற ஜெர்ஸி எண்ணிற்கும் ஓய்வை அறிவிக்க வேண்டுமென சுரேஷ் ரெய்னா கூறியிருக்கிறார்.

நடப்பாண்டில் நடைபெற்று வந்த 20 ஓவர் உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி 17 வருடங்களுக்கு பிறகு உலகக்கோப்பையை வென்று 2-வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றனர். இந்த வெற்றியை இந்திய ரசிகர்கள் 4 நாட்களாக கொண்டாடி வந்தனர். மேலும், பல முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் இந்த வெற்றியை குறித்து அவர்களது கருத்தை தெரிவித்து வருகின்றனர்.

அதே போல இந்திய அணியின் முன்னாள் அதிரடி பேட்ஸ்மேனான சுரேஷ் ரெய்னா ஜியோ சினிமாவில் பேசிய போது ஒரு சில கருத்தை முன்வைத்தார். அதில் ரோஹித் ஷர்மாவின் ஜெர்ஸி எண்ணான ’45’ -க்கும், விராட் கோலியின் ஜெர்ஸி எண்ணான ’18’-க்கும் ஓய்வை அறிவிக்க வேண்டுமென கூறி இருப்பார்.

அவர் பேசுகையில், “எண் ’18’ மற்றும் எண் ’45’ ஜெர்சிகளுக்கு ஓய்வு அளிக்குமாறு பிசிசிஐ-யை கேட்டுக்கொள்கிறேன். மேலும் அலுவலகத்தில் இந்த ஜெர்சி எண்களை வைத்திருக்கும் ஒரு சிறப்பு சந்தர்ப்பம் வேண்டும். இதற்கு முன் எண் ‘7’ ஏற்கனவே ஓய்வு அறிவித்தது.அதே போல ’18’ மற்றும் ’45’ க்கு ஓய்வை அறிவிக்க வேண்டும். அந்த எண்களை பார்க்கும் போது ஒவ்வொரு நபரும் உற்சாக படுத்தவேண்டும். 18 மற்றும் 45 எண்கள் பல சூழ்நிலைகளில் இருந்து இந்திய போட்டிகளை வென்றுள்ளனர்.

எந்த ஒரு புதிய வீரர் அணியில் வந்தாலும், இந்த எண்களைப் பார்ப்பதன் மூலம் அவர்களுக்கு ஒரு உத்வேகம் கிடைக்க வேண்டும்”, என்று கூறினார். மேலும், பிசிசிஐ ஒரு ஜெர்ஸி எண்ணுக்கு ஓய்வை அறிவித்தால் அந்த எண்ணை அதன்பிறகு இந்திய அணியில் இடம்பெறும் எந்த ஒரு வீரரும் எடுத்துக்கொள்ள முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

Recent Posts

12ம் வகுப்பு முடித்தவர்களுக்கு கோயம்புத்தூரில் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் வேலைவாய்ப்பு.!

உதவியாளருடன் இணைந்த Data Entry ஆட்சேர்ப்பு : கோயம்புத்தூர் மாவட்டத்தில் அமைந்துள்ள தமிழக அரசின் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் காலியாக உள்ள உதவியாளருடன் இணைந்த கணினி…

11 mins ago

ஒலிம்பிக் நீச்சல் போட்டிகள் நடைபெற உள்ள நதியில் கிருமிகள் ..!பிளான் – B ரெடி ..!

ஒலிம்பிக் 2024 : ஒலிம்பிக் போட்டிகளில், நடைபெற இருக்கும் நீச்சல் போட்டி நடைபெற இருக்கும் நதியில் மோசமான கிருமிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. வரும் ஜூலை-26ம் தேதி பிரான்ஸ் நாட்டின்…

25 mins ago

நீட் முறைகேடு.! தவறு செய்தவர்கள் கண்டறியாவிட்டால்..? உச்சநீதிமன்றம் புதிய உத்தரவு.!

டெல்லி: நீட் முறைகேடுகள் குறித்து சிபிஐ, மத்திய அரசு, தேசிய தேர்வு முகமை ஆகியவை பதில் அளிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நாடு முழுவதும் கடந்த…

26 mins ago

ஸ்வீட் பிரியர்களே..! இனிப்புச் சுவை பிடிக்க இப்படி ஒரு காரணம் கூட இருக்குதாம்..

Sweet-இனிப்பு பதார்த்தங்களை எடுத்துக்கொள்ள வேண்டும் என்ற உணர்வு வர காரணம் என்னவென்று இப்பதிவில் தெரிந்து கொள்வோம். இனிப்பு பதார்த்தங்களை அதிகம் சாப்பிடுவது  அதற்கு அடிமையாகி  இருப்பதோ அல்லது…

48 mins ago

ரவுடிகளுக்கு புரியும் மொழியில் நடவடிக்கை எடுக்கப்படும்.! சென்னை புதிய கமிஷனர் அருண் அதிரடி.!

சென்னை: ரவுடிகளுக்கு அவர்கள் புரியும் மொழியில் நடவடிக்கை எடுப்போம். ரவுடிகளை ஒடுக்குவோம். - சென்னை மாநகர காவல் ஆணையர் அருண். சென்னை மாநகரின் புதிய காவல் ஆணையராக…

1 hour ago

யானைகள் ஒன்றையொன்று பெயர் சொல்லி கூப்பிடுமா? புதிய ஆய்வில் ஆச்சரிய தகவல்!

கென்யா : மனிதர்களைப் போலவே யானைகளும் மற்ற யானைகளை பெயர் சொல்லி அழைப்பதாக கென்ய நாட்டின் ஆய்வு ஒன்று கண்டறிந்துள்ளது. ஆம், மனிதர்கள் நாம் ஒவ்வொருவருக்கும் ஒரு…

1 hour ago