ஏலியன்கள் பூமிக்கு வந்ததற்கு எந்தவித ஆதாரமும் இல்லை என்று அமெரிக்கா பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது.
யுஎஃப்ஒ(UFO- Unidentified Flying Object) எனும் அடையாளம் தெரியாத பறக்கும் தட்டுகள் குறித்த அறிக்கைகளை விசாரிப்பதற்காக அமெரிக்காவின் பென்டகன் எடுத்த முயற்சியில், வேற்றுகிரகவாசிகள் பூமிக்கு வருகை தந்ததாகவோ அல்லது இங்கு விபத்துக்குள்ளானதாகவோ எந்த ஆதாரமும் இல்லை என்று கூறியுள்ளது.
அமெரிக்காவின் தேசிய புலனாய்வு இயக்குநரின் அலுவலகம், ஜூன் 2021 இல் வெளியிட்ட அறிக்கையில் 2004 மற்றும் 2021 க்கு இடையில், 144 யுஎஃப்ஒக்கள்(அடையாளம் தெரியாத பறக்கும் பொருள்கள்) கண்டறியப்பட்டதாகவும் அவற்றுள் சென்சார்கள் மூலம் 80 யுஎஃப்ஒக்கள் படம் பிடிக்கப்பட்டதாகவும் தெரிவித்தது.
அவர்கள் மேலும் கூறியதாவது, இதுவரை நாங்கள் எந்த வேற்றுகிரக வாசிகளையும் பார்க்கவில்லை, இதனை கூறுவதற்கு நாங்கள் இன்னும் ஆரம்ப நிலையில்தான் இருக்கிறோம், இது குறித்து இன்னும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று தெரிவித்தனர்.
மேலும் பென்டகனில் புதிதாக உருவாக்கப்பட்ட ஆல்-டொமைன் அனோமலி ரெசல்யூஷன் ஆபிஸின் (AARO) இயக்குனர் சான் கிர்க்பாட்ரிக், இது குறித்து கூறும்போது ஆராய்ச்சி நடைபெற்று வருகிறது – வேற்று கிரக வாழ்க்கையின் சாத்தியத்தை நாங்கள் நிராகரிக்கவில்லை மற்றும் ஆராய்ச்சிக்கு அறிவியல் சார்ந்த ஆதாரத்தை சேகரித்து வருவதாகக் கூறினார்.
சென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை மீண்டும் ரூ.55 ஆயிரத்தை நெருங்கியதால் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். சர்வதேச கச்சா எண்ணெய் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி காரணமாக பெட்ரோல் மற்றும் டீசல்…
சென்னை : நேற்று நடைபெற்ற போட்டியில் மும்பை அணி தோல்வியடைந்த பிறகு மும்பை அணியின் கேப்டனான ஹர்திக் பாண்டியா தோல்வியடைந்ததற்கு இதுதான் காரணம் என கூறி பேசி இருந்தார்.…
சென்னை: ஆந்திரவில் நெடுஞ்சாலையில் நிகழ்ந்த பயங்கர சாலை விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர். ஆந்திர மாநிலம் அனந்தபூர் அருகே குத்தி என்ற இடத்தில் கட்டுப்பாட்டை இழந்த கார்,…
சென்னை : குஜராத்தில் 5 ரூபாய் லஞ்சம் வாங்கிய கணினி ஆபரேட்டரை லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடியாக கைது செய்துள்ளது. குஜராத் அகமதாபாத்தின் ஜாம்நகர் மாவட்டத்தில் மோர்கண்டா கிராம…
சென்னை: ஸ்வாதி மாலிவால் விவகாரம் பாஜகவின் சதி என ஆம் ஆத்மி விளக்கம் அளித்துள்ளது. கடந்த மே 13ஆம் தேதி டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டிற்கு…
சென்னை: 5ஆம் கட்ட தேர்தல் நடைபெற உள்ள மாநிலங்களில் இன்று மாலை 5 மணியுடன் பரப்புரை நிறைவடைகிறது. 5 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் உட்பட 49…