தெலுங்கானாவில் மாவோயிஸ்ட்கள் சுட்டுக்கொலை !

 

ஐதராபாத்: தெலுங்கானா- சத்தீஸ்கர் மாநில எல்லையில் போலீசாருடன் நடந்த மோதலில், 10 மாவோயிஸ்ட்கள் சுட்டு கொல்லப்பட்டனர். தெலுங்கானா – சத்தீஸ்கர் மாநில எல்லையில் உள்ளது பாதாத்ரி கோதகுடேம் பகுதியில் உள்ள தெலுங்கபாலி கிராமத்தில் மாவோயிஸ்டுகள் நடமாடுவதாக உள்ளூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து  மாவோயிஸ்ட்கள் பதுங்குமிடங்களை குறிவைத்து இரு மாநில போலீசாரும் தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது இரு தரப்புக்கு இடையே துப்பாக்கிச்சண்டை நடந்தது.

இதில் 10 மாவோயிஸ்ட்கள் சுட்டு கொல்லப்பட்டனர். ஒரு போலீஸ் அதிகாரி படுகாயமடைந்தார்.  புதன் இரவு முதல் நடந்த துப்பாக்கிசண்டை நேற்று காலை முடிவுக்கு வந்தது. அந்த பகுதியில் ஏராளமான ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. தொடர்ந்து அந்த பகுதியில் மோதல் நடந்தது.

மேலும் தகவலுக்கு இணைந்திடுங்கள் தினச்சுவடு

Leave a Comment