வடமாநில இளைஞர் ஒருவர் சென்னையில் உள்ள திருவொற்றியூர் ரயில்வே பாலத்தில் சுமார் 20 அடி உயரத்தில் இரும்புக் கம்பியின் மேல் அமர்ந்துகொண்டு தனக்கு மதுபாட்டில் வாங்கி தந்தால் தான் கீழே இறங்குவேன் என அந்த இளைஞர் தற்கொலை மிரட்டல் விடுத்துள்ளாராம்.
இதனை பார்த்த அக்கம் பக்கத்தில் இருந்த மக்கள் உடனே போலீசாருக்கு தகவலை தெரிவித்தனர். பிறகு அங்கு சென்ற போலீசார் அந்த இளைஞரிடம் கீழே இறங்க சொல்லி பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். எவ்வளவோ கூறியும் கீழே இறங்க அந்த இளைஞர் அடம் பிடித்துள்ளார்.
இதனால், வேறு வழியின்று, ஒரு மதுபாட்டிலை வாங்கி வந்து அவரிடம் கொடுக்க அந்த மதுபாட்டிலை இளைஞர் வாங்கிக்கொண்டு மீண்டும் இறங்காமல் குதிக்கப் போவதாகப் விளையாட்டு காட்டியுள்ளார்.
இதனால் கடுப்பான போலீசார் உடனடியாக அந்த கம்பியில் இருந்து மெதுவாக இறங்கி வலுக்கட்டாயமாக அந்த இளைஞரை பாதுகாப்பாக அங்கிருந்து அலேக்காக தூக்கினர். மேலும், அந்த இளைஞர் கீழே விழுந்தால் அவரை காப்பாற்றுவதர்காக கீழே தீயணைப்பு துறையினரும் இருந்தார்கள். இந்த சம்பவத்தால் திருவொற்றியூர் ரயில்வே பகுதி சில மணி நேரம் பரபரப்பாக இருந்தது.
IPL2024: பஞ்சாப் அணி 18.5 ஓவரில் 5 விக்கெட் இழந்து 145 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில் பஞ்சாப் அணியும்,…
சென்னை : 2014, 2019, 2024 பொதுத்தேர்தல்களில் பிரதமர் மோடி வெளியிட்ட தேர்தல் பிரமாண பத்திர விவரங்களின்படி சொத்து விவரங்கள் தெரியவந்துள்ளன. இந்திய பொதுத்தேர்தல்களில் போட்டியிடும் வேட்பாளர்கள்…
சென்னை : கோட் படத்திற்கு 150 கோடி தயாரிப்பு நிறுவனம் கேட்டதால் பிரபல ஓடிடி நிறுவனம் படத்தை வாங்க மறுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கோலிவுட் திரையுலகில் மிகப்பெரிய…
சென்னை : இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரான சௌரவ் கங்குலி, ஆஸ்திரேலியா இளம் வீரரான ஜேக் ஃப்ரேசர்-மெக்குர்க்கு ஆதரவாக பேசி இருக்கிறார். இந்த 2024 ஆண்டின் ஐபிஎல்…
சென்னை: கனமழை எச்சரிக்கையால், அனைத்துத் துறைகளும் தயார் நிலையில் இருக்க 26 மாவட்ட ஆட்சியர்களுக்கு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை உத்தரவிட்டுள்ளது. இன்று முதல் 19ம்…
Heat boils-சூட்டு கொப்பளங்கள் ஏன் வருகிறது என்றும் அதை சரி செய்யும் முறை பற்றியும் இப்பதிவில் காணலாம். சூட்டு கொப்புளம் வர காரணங்கள் : குளிர்காலத்தில் எப்படி…