போதைக்காக தின்னரில் எலுமிச்சை சாற்றை கலந்து குடித்தவர் பரிதாபமாக பலி….!

போதைக்காக தின்னரில் எலுமிச்சை சாற்றை கலந்து குடித்தவர் பரிதாபமாக பலி. 2 பேர் மருத்துவமனையில் அனுமதி. 

கொரோனா பரவல் அதிகரித்து வருவதையடுத்து, தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால், அனைத்து மதுக்கடைகளும் மூடப்பட்டுள்ளது. இந்நிலையில் மதுபான பிரியர்கள் பலரும் திண்டாடி வருகின்றனர். அந்த வகையில் ஒரகடம் அருகே குன்னவாக்கம் பகுதியில் பெயிண்டர் ஆக பணியாற்றி வருபவர் சங்கர். இவர் போதைக்காக கடந்த 3 நாட்களாக பெயிண்டில் கலக்கும் தின்னர் என்ற ரசாயனத்தி எலுமிச்சை சாற்றை பிழிந்து குடித்து வந்துள்ளார்.

 இதனை தொடர்ந்து, இவர் தன்னுடைய நண்பர்களான சிவசங்கரன், சுரேஷ், கிருஷ்ணா ஆகியோருடன் இணைந்து கூட்டாக இந்த ரசாயனத்தை குடித்துள்ளார். இதில் சங்கருக்கு வலிப்பு ஏற்பட்டுள்ளது. உடனடியாக அவரை ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

மேலும் கிருஷ்ணன் மற்றும் சிவசங்கர் ஆகியோர் சுயநினைவின்றி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவருடன் சேர்ந்து ரசாயனத்தை குடித்த மற்றொரு நபரான சுரேஷ் என்பவர் எங்கு இருக்கிறார் என்றே கிராம மக்களுக்கு தெரியவில்லை. அவரை வயல்காட்டில் தேடியும் கிடைக்காத காரணத்தினால், காவல்துறையினர் தற்போது அவரை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக ஓரகடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.
Tags: #Deathdinner

Recent Posts

ஸ்டோய்னிஸ் அதிரடியால் லக்னோ அணி அபார வெற்றி ! மும்பையின் ப்ளே ஆஃப் கனவு கேள்வி குறி !

IPL 2024 : இன்று நடைபெற்ற போட்டியில் லக்னோ அணி மும்பை அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஐபிஎல் தொடரின் 48வது போட்டியாக இன்று லக்னோ…

3 hours ago

எதுக்கு அவுங்க டீம்ல இல்ல? பிசிசிஐக்கு கேள்வி எழுப்பும் ரசிகர்கள் !

BCCI : டி20 உலகக்கோப்பைக்கான  பிசிசிஐ அறிவித்துள்ள இந்திய அணியை ரசிகர்கள் இணையத்தில் விமர்சித்து வருகின்றனர். ஐபிஎல் தொடர் நடைபெற்று வரும் நிலையில் தற்போது டி20 உலகக்கோப்பை…

8 hours ago

தெற்கு காசாவில் இஸ்ரேல் தாக்குதல் தொடரும்… நெதன்யாகு திட்டவட்டம்.!

Israel : தெற்கு காசாவில் இஸ்ரேல் தாக்குதல் தொடரும் என அந்நாட்டு பிரதமர் நெதன்யாகு திட்டவட்டமாக தெரிவித்தார். இஸ்ரேலுக்கு எதிரான ஹமாஸ் அமைப்பினரை முழுதும் அழிக்கும் வரையில்…

8 hours ago

ஐயோ பிரிச்சு பேசாதீங்க! குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து விலகியது பற்றி ஜிபி முத்து!

Gp Muthu : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து விலகியது பற்றி ஜிபி முத்து பேசியுள்ளார். குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சி பெரிய…

8 hours ago

உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் முதல் முறையாக துபே, சாம்சன்!

T20 World Cup 2024: டி20 உலக கோப்பை தொடருக்காக ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்தது. ஐபிஎல் தொடர் முடிந்த உடனே டி20 உலகக்கோப்பை…

9 hours ago

பரவும் பறவை காய்ச்சல்… கண்காணிக்கும் மத்திய சுகாதாரத்துறை.!

Bird Flu : இந்தியாவில் பரவும் பறவை காய்ச்சல் தொடர்பாக இந்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளது. நமது நாட்டில் மட்டும்மல்லாது உலகில் ஒரு சில நாடுகளில்…

9 hours ago