இது என்னடா கொடுமை ..! 500 ரூபாய் லஞ்சம் தராததால் 100 வருடத்திற்கு முன் பிறந்ததாக சான்றிதழ் கொடுத்த அதிகாரி.!

  • உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள பெலா கிராமத்தை சேர்ந்த ஒரு தம்பதி இரண்டு மகன்களுக்கு பிறப்பு சான்றிதழ் கோரி விண்ணப்பித்துள்ளனர்.
  • அதிகாரிகள் ஒவ்வொரு சான்றிதழுக்கும் தலா 500 ரூபாய் லஞ்சம் கேட்டனர். அவர்கள் தராததால் 100 வருடத்திற்கு முன் பிறந்ததாக கூறி பிறப்பு சான்றிதழ் கொடுத்துள்ளனர்.

உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள பெலா கிராமத்தை சேர்ந்த ஒரு தம்பதி 2 மாதத்திற்கு முன் தங்கள் இரண்டு மகன்களுக்கு பிறப்பு சான்றிதழ் கோரி விண்ணப்பித்துள்ளனர். இதைத் தொடர்ந்து கிராம மேம்பாட்டு அதிகாரி சுசில் சந்த் அக்னிஹோத்ரி மற்றும் தலைவர் பிரவீன் மிஸ்ரா ஆகிய இருவரும்  ஒவ்வொரு சான்றிதழுக்கும் தலா 500 ரூபாய் லஞ்சம் கொடுக்க வேண்டும் என கூறியுள்ளனர்.

ஆனால் அந்த தம்பதி அவர்களுக்கு லஞ்சம் கொடுக்க மறுத்து உள்ளனர். இதனால் ஆத்திரம் அடைந்த அதிகாரிகள் ஜூன் 13, 2016 -ம் ஆண்டு என சான்றிதழ் குறிப்பிடுவதற்கு பதிலாக ஜூன் 13 ,1916 எனவும் , ஜனவரி 6 , 2018 என்பதற்கு பதிலாக ஜனவரி 6 1918 என மாற்றி குறிப்பிட்டு பிறப்பு சான்றிதழ் கொடுத்துள்ளனர்.

இதனால் பாதிக்கப்பட்டது அந்த தம்பதியின் உறவினர்கள்  நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இதைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட கிராம மேம்பாட்டு அதிகாரி மற்றும்  தலைவர் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கும்படி அரசுக்கு பெரெய்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

murugan

Recent Posts

விடுமுறையில் செம கலெக்ஷன்! வசூலில் மிரட்டி விட்ட ரத்னம்!

Rathnam : விஷால் நடிப்பில் வெளியான ரத்னம் திரைப்படம் உலகம் முழுவதும் 11 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இயக்குனர் ஹரி இயக்கத்தில் விஷால்  நடிப்பில்…

12 mins ago

‘கோட்’ படத்தில் சிஎஸ்கே வீரர்கள்? உண்மையை உடைத்த அஜ்மல் !!

Ajmal Ameer : விஜய் நடித்து கொண்டிருக்கும் 'தி கோட்' படத்தில் சிஎஸ்கே வீரர்கள் நடித்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. நடிகர் விஜய் நடித்து வரும் படமான 'தி கோட்'…

21 mins ago

மணிப்பூர் பெண்களுக்கு நேர்ந்த கொடூரம்… CBI அறிக்கையில் திடுக்கிடும் தகவல்கள்…

Manipur Violence : மணிப்பூரில் ஒரு கும்பலால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட இரு பெண்கள் குறித்தும், அங்கு நேர்ந்த சம்பவங்கள் குறித்தும் CBI அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த…

46 mins ago

கோவிஷீல்டு தடுப்பூசியால் பக்க விளைவா? வெளியான அதிர்ச்சி தகவல்!

Covishield: கோவிஷீல்டு தடுப்பூசியால் அரிதாகவே பக்க விளைவுகள் ஏற்படலாம் என அஸ்ட்ராஜெனெகா நிறுவனம் அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளது. முதன் முதலில் சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் பின்னர்…

50 mins ago

ரோஹித்திடம் பேசியதை நினைத்து மனம் நெகிழ்ந்த கம்பிர் ! என்ன விஷயம்னு தெரியுமா ?

Rohit Sharma : ரோஹித் சர்மா கிரிக்கெட்டிற்குள் நுழைந்த போது அவரிடம் பேசிய விஷயங்களை பற்றி கவுதம் கம்பீர் நினைவு கூர்ந்தார். இந்திய அணியின் கிரிக்கெட் கேப்டன்…

1 hour ago

டி20 இந்திய அணியை அறிவித்தது பிசிசிஐ ! இந்த டைம் மிஸ்ஸே ஆகாது !

BCCI : டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது பிசிசிஐ. ஐபிஎல் 2024 தொடர் நடைபெற்று வரும் நிலையில் நடைபெற இருக்கும் டி20 உலகக்கோப்பை…

1 hour ago