kallakurichi Dead Case

கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரம்… பலி எண்ணிக்கை 38ஆக உயர்வு.!

By

கள்ளக்குறிச்சி: கருணாபுரத்தில் விஷச்சாராயம் அருந்தியதில் இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 38ஆக அதிகரித்துள்ள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் நேற்று முன்தினம் விஷச்சாராயம் விற்கப்பட்டு இருந்துள்ளது. இதனை அருந்திய பலர் உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

விஷச்சாராயம் அருந்தியவர்களில் பெரும்பாலானோர் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் பலர் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை, சேலம், விழுப்புரம் அரசு மருத்துவமனைகளிலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 38ஆக உயர்ந்துள்ளது என தகவல்கள் வெளியாகி வருகின்றன. 100க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  இந்த வலக்கை சிபிசிஐடி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். இதுவரை 3 பேர் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் 10 பேரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

Dinasuvadu Media @2023