மேகதாது விவகாரம் …!தமிழகத்துடன் சண்டை போட விரும்பவில்லை…!கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர்

 தமிழகத்துடன் சண்டை போட விரும்பவில்லை என்று 
கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் சிவக்குமார் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் சிவக்குமார் கூறுகையில்,  தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய நீரை மேகதாது அணை திட்டம் தடுக்காது.மேகதாதுவில் அணை கட்டினால் 67 டிஎம்சி தண்ணீரை சேமிக்க முடியும்.

Image result for கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் சிவக்குமார்

மேகதாது திட்டம் கர்நாடகாவை விட தமிழகத்திற்கே பயனளிப்பதாக இருக்கும். இரு மாநிலங்களும் பயன்படுத்த முடியாமல் வீணாக கடலில் கலக்கும் நீரை தடுக்கவே அணை கட்டுகிறோம்.தமிழக முதல்வரை சந்திக்க நேரம் கேட்டிருந்தோம். இதுவரை எந்த பதிலும் இல்லை.தமிழகத்துடன் சண்டை போட விரும்பவில்லை. நாங்கள் சகோதரர்கள் என்றும் 
கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் சிவக்குமார் தெரிவித்துள்ளார்.

Leave a Comment