வரலாற்றில் முதல் முறையாக போர் விமானத்துக்கு தலைமை தாங்கிய முதல் பெண்.!

குடியரசு தின விழாவில், இந்தாண்டு விமானப்படை வரலாற்றில் முதல் முறையாக போர் விமானத்தை பெண் விமானி பாவனா காந்த் அணிவகுத்தார்.

நாடு முழுவதும் இன்று குடியரசு தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. தலைநகர் டெல்லியில் நடைபெறும் குடியரசு தின விழாவில் குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே பார்வையாளர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் குடியரசு தின விழா அணிவகுப்பில், போர் விமானங்கள் பங்கேற்கும், கண்கவரும் சாகச நிகழ்ச்சிகள் அரங்கேறுவது வழக்கம்.

இந்நிலையில், டெல்லியின் ராஜ்பாத்தில் நடைபெற்ற குடியரசு தின அணிவகுப்பில் இந்திய விமானப்படையின் (ஐஏஎஃப்) அணிவகுப்பில் பங்கேற்ற முதல் பெண் போர் விமானியாக விமான லெப்டினன்ட் பவானா காந்த் பெருமை கொள்கிறார். IAF அணிவகுப்பில் ஒளி போர் விமானம், ஒளி போர் ஹெலிகாப்டர் மற்றும் சுகோய் -30 போர் விமானங்கள் இடம்பெற்றது.

குடியரசு தின விழாவில், அணிவகுப்பு கமாண்டராக, லெப்டினன்ட் ஜெனரல் விஜய் குமார் மிஸ்ரா தலைமையேற்று சென்றார். இந்திய விமானப்படையில் போர் விமானங்களில் பணியாற்றும் 3 பெண் விமானிகளில் ஒருவரான பாவனா காந்த், இந்திய விமானப்படையின் அணிவகுப்பில் அணிவகுத்து சென்றார். ‘ஸ்வர்நீம் விஜய் வர்ஷ்’ என்ற தலைப்பில், இந்திய கடற்படை வீரர்கள், அணிவகுப்பில் பங்கேற்றனர்.

பீஹாரின் தர்பங்காவைச் சேர்ந்த பாவனா, மருத்துவ மின்னணுவியல் இன்ஜினியரிங் பட்டதாரி. இவர் கடந்த நவம்பர் 2017-ல் போர் படையில் இணைந்தார். மார்ச் 2018ல் மிக்-21 போர் விமானத்தை இயக்கியுள்ளார். தற்போது அவர் ராஜஸ்தானில் உள்ள ஒரு விமானத் தளத்தில் பணிபுரிந்து வருகிறார். அங்கு அவர் மிக் -21 பைசன் போர் விமானத்தை இயக்கி வருகிறார்.

கடந்த 2016-ஆம் ஆண்டு பாவனா காந்த், அவனி சதுர்வேதி மற்றும் மோகனா சிங் ஆகியோரும் இந்திய விமானப்படையின் முதல் பெண் போர் விமானிகளாக பொறுப்பேற்றனர். 2015-ஆம் ஆண்டில் IAF இன் போர் சோதனைத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர் 10 பெண்கள் போர் விமானிகளாக நியமனம் செய்யப்பட்டது. இவர்களில் பாவனா காந்த், குடியரசு தின விழா போர் அணிவகுத்து, சாகசங்களை நிகழ்த்திய முதல் பெண்ணாக திகழ்கிறார்.

பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Recent Posts

ஐபிஎல் திருவிழாவின் இன்றைய போட்டி ..! மும்பையுடன் பலப்பரீட்சை நடத்தும் கொல்கத்தா !!

ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியாக மும்பை அணியும், கொல்கத்தா அணியும் மோதுகிறது. நடைபெற்று வரும் இந்த ஐபிஎல் தொடரில் இன்றைய 50-வது போட்டியாக…

2 hours ago

அட்சய திருதியை 2024 ல் எப்போது? தங்கம் வாங்குவதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க.!

அட்சய திருதியை 2024-அட்சய திருதியையின் சிறப்புகள் மற்றும் இந்த ஆண்டுக்கான தேதி எப்போது என தெரிந்து கொள்வோம். அட்சய திருதியை 2024: இந்த ஆண்டு மே மாதம்…

3 hours ago

IPL2024: ராஜஸ்தானை வீழ்த்தி ஹைதராபாத் திரில் வெற்றி..!

IPL2024:ராஜஸ்தான் அணி 20 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து 200 ரன்கள் எடுத்தனர். இதனால் ஹைதராபாத் அணி 1 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில்…

10 hours ago

ஆந்திராவில் 2,000 ஆயிரம் கோடி ரூபாயுடன் சிக்கிய 4 கண்டெய்னர்கள்.!

Andhra pradesh: ஆந்திராவில் ரூ.2,000 கோடி பணத்துடன் சென்ற 4 கண்டெய்னர்கள் பிடிபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆந்திராவில் மே 13ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளதால் பறக்கும்…

15 hours ago

என்னதான் ஆச்சு .. ?அறிவித்தவுடன் சொதப்பும் இந்திய வீரர்கள்… கவலையில் ரசிகர்கள் !

Indian Team : டி20 அணியை அறிவித்த பிறகு இந்திய அணியில் இடம்பெற்றுள்ள சில வீரர்கள் அடுத்தடுத்து ஐபிஎல் போட்டியில் சொதப்பி வருவதால், ரசிகர்கள் கவலையில் இருக்கின்றனர். வருகிற…

15 hours ago

கிருஷ்ணரின் சாதனையை முறியடிக்க பிரஜ்வல் முயற்சி.? காங்கிரஸ் அமைச்சரின் சர்ச்சை கருத்து.!

Prajwal Revanna : கிருஷ்ணரின் சாதனையை முறியடிக்க பிரஜ்வல் ரேவண்ணா முயற்சித்துள்ளார் என கர்நாடகா காங்கிரஸ் அமைச்சர் சர்ச்சையாக கருத்து தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலம் ஹாசன் தொகுதி…

15 hours ago