நியாயமான முறையில் இடைத்தேர்தல் நடத்தப்படும்.! உயர்நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் உறுதி.!

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் நியாயமான முறையில் நடத்தப்படும் என்று உயர் நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் உறுதி அளித்துள்ளது. 

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தரப்பில் வழக்கு ஒன்றை நேற்று தொடுத்து இருந்தார். அதில் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் வேட்பாளர் எண்ணிகையில் குளறுபடி இருப்பதாக தெரிவித்து இருந்தார்.

கள்ளஓட்டு அபாயம் : அதாவது, ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்றத்திற்கு உட்பட்ட வாக்காளர் பட்டியலில் , இறந்தவர்களின் பெயர்கள்  சேர்க்கப்பட்டுள்ளது. மேலும், பலரது வாக்காளர்கள் பெயர்கள் இரண்டு முறை உள்ளது என்றும், இதனால் கள்ள ஓட்டு போடும் அபாயம் இருக்கிறது. இதனை தடுத்து நியாயமான முறையில் தேர்தல் நடத்த தமிழ்நாடு தேர்தல் ஆணையத்திற்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று அந்த வழக்கில் கோரிக்க வைக்கப்பட்டு இருந்தது.

தேர்தல் ஆணையம் உறுதி : இது குறித்து வழக்கு விசாரணை இன்று நடைபெற்ற போது, ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் நியாயமான முறையில் நடத்தப்படும் என்று உயர் நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் உறுதி அளித்து உள்ளது.

தேர்தல் ஆணைய உத்தரவு : இதற்கு முன்னதாக அதிமுக கொடுத்த புகாரின் பெயரில். இந்திய தேர்தல் ஆணைய உத்தரவுபடி தமிழ்நாடு தேர்தல் ஆணையர் சத்திய பிரதாப் சாகு, ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி தேர்தல் அதிகாரிக்கு வாக்காளர் பட்டியல் குறித்து முறையான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Recent Posts

பிரதமர் மோடி பற்றி அவதூறு.. 100 கோடி ரூபாய் பேரம்.! டி.கே.சிவகுமார் மீது பரபரப்பு குற்றசாட்டு.!

சென்னை: பிரதமர் மோடி பற்றி அவதூறு பரப்பினால் 100 கோடி ரூபாய் தருவதாக டி.கே.சிவகுமார் பேரம் பேசினார் என தேவராஜே கவுடா குற்றம்சாட்டியுள்ளார். கர்நாடகா ஹாசன் தொகுதி…

31 mins ago

ஐபிஎல் தொடரின் கடைசி லீக் போட்டி !! ராஜஸ்தான் – கொல்கத்தா அணிகள் பலப்பரீட்சை !!

சென்னை : ஐபிஎல் தொடரில் இன்றைய இரவு போட்டியில் ஹைதராபாத் அணியும், ராஜஸ்தான் அணியும் மோதுகிறது. நடைபெற்று வரும் இந்த ஐபிஎல் தொடரில் லீக் போட்டிகளில் கடைசி…

40 mins ago

ஒழுங்கா நடிக்கலைனா அடிப்பாரு! மம்முட்டி குறித்து அதிர்ச்சி தகவலை சொன்ன பிரபலம்?

சென்னை : ஒழுங்காக நடிக்கவில்லை என்றால் மம்முட்டி முடித்துவிடுவார் என பாவா லட்சுமணன் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். மலையாள சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்பவர் நடிகர் மம்முட்டி.…

2 hours ago

ஹோட்டல் சுவையில் நூடுல்ஸ் இனி வீட்டிலேயே செய்யலாம்.!

Noodles recipe-ஹோட்டல்களில் கிடைப்பது போல் அதே சுவையில் நூடுல்ஸ் செய்வது எப்படி என இப்பதிவில் தெரிந்து கொள்வோம். தேவையான பொருள்கள்: நூடுல்ஸ் =150 கிராம் எண்ணெய் =5…

2 hours ago

ஆறுதல் வெற்றியை பெறுமா பஞ்சாப் அணி ? ஹைதராபாத் அணியுடன் இன்று பலப்பரீட்சை !!

சென்னை : ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியில் ஹைதராபாத் அணியும், பஞ்சாப் அணியும் மோதுகிறது. நடைபெற்று வரும் இந்த ஐபிஎல் தொடரில் இன்றைய 69-வது போட்டியாக இன்று…

4 hours ago

IPL2024: சென்னையை வீழ்த்தி பிளே ஆப் சென்ற பெங்களூர்..!

IPL2024: சென்னை அணி 20 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து 191 ரன்கள் எடுத்தனர். இதனால் பெங்களூர் அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய…

11 hours ago