இரண்டு தங்கம் சுரங்கங்கள் கண்டுபிடிப்பு.! இது கையிருப்பை விட 5 மடங்கு அதிகம்.!

  • உத்திர பிரதேசத்தில் 2 பெரிய தங்க சுரங்கங்களை புவியியல் ஆய்வு மையம் கண்டுபிடித்துள்ளது. தங்கம் மற்றும் தாது பொருட்கள் கிடைத்தால் மாநில அரசின் வருவாய் பல மடங்கு அதிகரிக்கும் என்று அதிகாரிகள் கருத்து

இந்திய புவியியல் ஆய்வு மையம் தங்க சுரங்கம் தொடர்பாக பல ஆண்டுகள் ஆராய்ச்சியில் ஈடுபட்டு வந்தனர். இந்தியா முழுவதும் பல சோதனைகள் மேற்கொண்டதில் தற்போது அதற்கான பலன் கிடைத்துள்ளது. உத்திர பிரதேசத்தில் உள்ள சோன்பத்ராவில் 2 பெரிய தங்க சுரங்கங்களை புவியியல் ஆய்வு மையம் கண்டுபிடித்துள்ளது. பின்னர் இவர்களுடன் சேர்ந்து மாநில புவியியல் மற்றும் சுரங்கம் இயக்குநரகம் நடத்திய ஆய்வில் தெரியவந்தது. அதன்படி இந்த சுரங்கங்களில் 3,350 டன் அளவுள்ள தங்க படிமங்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. மேலும் சோன்பாஹ்தி என்ற இடத்தில 2700 டன் தங்க படிமங்களும், ஹார்டி என்ற சுரங்கத்தில் 650 டன் தங்க படிமங்கள் இருப்பதாக கண்டறியப்பட்டது.

தற்போது இந்தியாவின் கையிருப்பில் 626 டன் தங்கம் உள்ள நிலையில், இப்போது கிடைத்துள்ள தங்க அளவு கையிருப்பைவிட 5 மடங்கு அதிகம் என கூறப்படுகிறது. மேலும் தங்கம் மட்டுமின்றி யுரேனியம் போன்ற தாது பொருட்களும் இருப்பதாக ஆய்வாளர்களை தகவல் தெரிவிக்கின்றனர். தங்கம் மற்றும் தாது பொருட்கள் கிடைத்தால் மாநில அரசின் வருவாய் பல மடங்கு அதிகரிக்கும் என்றும், மாநிலத்தில் வேலைவாய்ப்பு அதிகரிக்கவும் இது உதவும் என்று அதிகாரிகள் கருத்து தெரிவித்துள்ளனர். இதனிடையே உலக நாடுகளைப் பொறுத்தவரை அமெரிக்காவிடம் 8133.5 டன் தங்கமும், ஜெர்மனியில் 3366 டன் தங்கமும், ரஷ்யாவிடம் 2541.9 டன் தங்கமும், சீனாவிடம் 1948.3 டன் தங்கமும் கையிருப்பு உள்ளன.

பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Recent Posts

IPL2024: ராஜஸ்தானை வீழ்த்தி ஹைதராபாத் திரில் வெற்றி..!

IPL2024:ராஜஸ்தான் அணி 20 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து 200 ரன்கள் எடுத்தனர். இதனால் ஹைதராபாத் அணி 1 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில்…

1 hour ago

ஆந்திராவில் 2,000 ஆயிரம் கோடி ரூபாயுடன் சிக்கிய 4 கண்டெய்னர்கள்.!

Andhra pradesh: ஆந்திராவில் ரூ.2,000 கோடி பணத்துடன் சென்ற 4 கண்டெய்னர்கள் பிடிபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆந்திராவில் மே 13ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளதால் பறக்கும்…

6 hours ago

என்னதான் ஆச்சு .. ?அறிவித்தவுடன் சொதப்பும் இந்திய வீரர்கள்… கவலையில் ரசிகர்கள் !

Indian Team : டி20 அணியை அறிவித்த பிறகு இந்திய அணியில் இடம்பெற்றுள்ள சில வீரர்கள் அடுத்தடுத்து ஐபிஎல் போட்டியில் சொதப்பி வருவதால், ரசிகர்கள் கவலையில் இருக்கின்றனர். வருகிற…

6 hours ago

கிருஷ்ணரின் சாதனையை முறியடிக்க பிரஜ்வல் முயற்சி.? காங்கிரஸ் அமைச்சரின் சர்ச்சை கருத்து.!

Prajwal Revanna : கிருஷ்ணரின் சாதனையை முறியடிக்க பிரஜ்வல் ரேவண்ணா முயற்சித்துள்ளார் என கர்நாடகா காங்கிரஸ் அமைச்சர் சர்ச்சையாக கருத்து தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலம் ஹாசன் தொகுதி…

7 hours ago

உருவாகிறது பயோபிக்! அண்ணாமலையாக நடிக்கும் விஷால்?

Annamalai Biopic : தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் வாழ்கை வரலாற்று படம் எடுக்கப்படவுள்ளதாகவும் அதில் விஷால் நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள்,…

7 hours ago

கொளுத்தும் வெயிலில்.. இந்த 6 மாவட்டத்திற்கு அடுத்த 3 மணி நேரத்தில் கோடை மழை.!

Weather Update : அடுத்த 3 மணி நேரத்தில் 6 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது. தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் வெயில் வாட்டி…

8 hours ago